தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து, நாளை சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் உரிய விளக்கம் அளிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 'சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சரி செய்து கொண்டுதான் இருக்கிறோம். அதற்கான புள்ளி விவரங்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நாளை உரிய விளக்கம் அளிப்பார்' என்று கூறினார்.
மேலும் அவர், 'முழுமையாக பேசி முடித்த பின்னர் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் இருந்தது.. அது இப்போ மாறியிருக்கிறது' என்றும் குறிப்பிட்டார். சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அளிக்கும் விளக்கம், மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.