சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை, அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் இணைந்து கலாய்த்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேரவையில் நடைபெற்ற விவாதங்களின் போது, முதலமைச்சர் விஜய் எப்போதும் போல் அமைதியாகவும், ஒருவித சோகமான முகத்துடனும் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் நேரடியாக பதிலளிக்காமல் மௌனம் சாதித்தது, திமுக மற்றும் தவெக இடையே கடுமையான மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், முக்கியப் பிரச்சனைகளுக்கு பதிலளிக்காமல், பொதுப்பணித்துறை அமைச்சரை பதிலளிக்கச் சொன்னதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இருப்பினும், விஜய் பேரவையில் வாய் திறக்கவில்லை. இந்த சூழலில், திருவையாறு திமுக எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன் மற்றும் சக்கரபாணி, அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யின் முகத்தை சுளிக்கும்படி செய்துகாட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் மௌனம் மற்றும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்த இந்த வீடியோ, அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதப் பொருளாக மாறியுள்ளது.