சென்னை: 'Start Run, Stop Drugs' மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ. பவானி தேவி, முதலமைச்சர் விஜய்யுடன் உரையாடிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக தான் சற்று பின்தங்கியதை கவனித்த முதல்வர், பாதுகாவலரிடம் கூறி தன்னை முன்னே அழைத்து வந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தனது அனுபவங்களை ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: 'மாரத்தான் ஓடத் தொடங்கியபோது, முதலமைச்சரைச் சுற்றி அதிகளவிலான பாதுகாவலர்களும், கூட்டமும் இருந்தன. இதனால் நான் சற்று பின்தங்கிவிட்டேன். இதை கவனித்த முதலமைச்சரும், ஆதவ் சர்மாவும், பாதுகாவலரிடம் கூறி என்னை முன்னே அழைத்து வந்தனர். சில நிமிடங்கள் ஓய்வெடுத்தபோது, முதலமைச்சர் என்னிடம், ‘ஓடி ரொம்ப நாளாச்சுல்ல அதாம்மா…' என்று கேட்டார். அதற்கு நான், ‘சார்… நானும் ஓடி ரொம்ப நாளாச்சு…. ஒரு காயத்துக்குப் பிறகு இப்போதுதான் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓடுகிறேன்' என்று பதிலளித்தேன். அவர் அருகில் அமர சிறிது தயக்கமாக இருந்தாலும், மிகவும் சகஜமாகப் பழகினார். பின்னர், அவரிடம் செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக சம்மதித்தார்' என்று பவானி தேவி கூறினார்.
முதலமைச்சர் விஜய், பவானி தேவியின் காயத்தைப் பற்றி விசாரித்ததும், அவருடன் சகஜமாக உரையாடியதும் அவரை நெகிழச் செய்தது. ஒரு விளையாட்டு வீரரின் சிரமத்தை உணர்ந்து, அவரை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டது பாராட்டத்தக்கது.
மாரத்தான் ஓட்டத்தின் போது முதலமைச்சருடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு, பவானி தேவிக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் செயல்பாடு, பலருக்கும் முன்மாதிரியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.