MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!

தமிழ்நாடு

பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்: 5 முக்கிய கோரிக்கைகள்!

Admin
Last updated: ஜூலை 2, 2026 7:13 காலை
Admin
Share
SHARE

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் ஒரு முக்கிய கடிதம் எழுதியுள்ளார். அதில், 'விக்சித் பாரத்—ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]' திட்டத்தின் செயலாக்கம் குறித்து தனது கவலைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இத்திட்டம் 01.07.2026 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் நிதிப் பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டுரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார். எனவே, ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள மக்களை இது கடுமையாகப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிதிப்பகிர்வு முறையைப் பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன், பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக்கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடர வேண்டும் என்றும், கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கோரியுள்ளார்.

மேலும், இந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகள், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையைக் கொண்டுவருவதாகவும், நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது மாநிலத்தின் சமூகப் பொருளாதார பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால், உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முக்கிய வேளாண் பருவங்களை அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டு வசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது. பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாக கொண்டு, 'அனைவருக்கும் வீடு' என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டு வசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவ வேண்டும் என முதல்வர் விஜய் கோரியுள்ளார். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்றும், இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே இந்த முன்மொழிவுகளை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:VB-GRAMGகிராமப்புற வேலைவாய்ப்புதமிழ்நாடு அரசுபிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் ரூ.2500 எப்போது? முதலமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் கேள்வி
Next Article 02-07-2026 ராசி பலன்: நண்பர்களிடம் பகை, அனுசரித்து செல்வது நலம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தவெக ஆட்சி திமுகவின் நீட்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தற்போதைய தவெக ஆட்சி, 2011-க்கு முந்தைய திமுகவின் கொடூர ஆட்சியின் தொடர்ச்சியாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு, மின்வெட்டு…

1 Min Read
தமிழ்நாடு

கோவை: குப்பையில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி – நேர்மைக்கு குவிந்த பாராட்டு

கோவை மாநகராட்சியில் குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை நேர்மையாக அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது இந்த…

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. அரசுக்கு காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை இன்று அறிவித்தது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு…

1 Min Read
சென்னை வண்டலூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர்
தமிழ்நாடு

வண்டலூரில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்: பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை வண்டலூரில் பயிற்சியின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர், ராணுவ இடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?