டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படுவதில் தங்கள் அரசு உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வி சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வர் விஜய் முன்வைத்தார். அத்துடன், தமிழ்நாட்டில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையாக கோவை மாவட்டத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு மற்றும் கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள், தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
