சென்னையில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் 16 சரக்கு பெட்டிகளில் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டிருந்தன. டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்ட இந்த ரயில், தாம்பரம் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென பெரும் சத்தத்துடன் என்ஜின் தடம் புரண்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ரயில் என்ஜின் லோகோ பைலட், ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், மீட்பு ஊழியர்களுடன் இணைந்து என்ஜினை மீண்டும் தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்டபோது ரயிலில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தடம் புரண்ட என்ஜினை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு பெட்டிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
