MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

அரசியல்

காவிரி நீர்: ஜூன் மாதத்துக்கான 9.91 டிஎம்சி வழங்க வலியுறுத்தல்

Admin
Last updated: மே 27, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி காவிரி நீர் வழங்கப்பட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. டெல்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழகத்தின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு காணொலி காட்சி மூலம் பங்கேற்று தமிழகத்தின் கோரிக்கைகளை முன்வைத்தார்.

கூட்டத்தில் பேசிய தமிழக உறுப்பினர், மேட்டூர் அணையில் தற்போது 40.742 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளதாகவும், குடிநீர், தொழிற்சாலை பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வினாடிக்கு 1,003 கன அடி நீர் திறந்து விடப்படுவதாகவும் தெரிவித்தார். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் (2025-26) ஜூன் 1 முதல் மே 24 வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவு 176.685 டிஎம்சி ஆகும். இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் உட்பட மொத்தம் 329.166 டிஎம்சி நீர் தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது.

கர்நாடக உறுப்பினர், தாங்கள் வழங்கிய உபரி நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், இதனை தமிழக உறுப்பினர் சத்யபிரதா சாகு எதிர்த்தார். கர்நாடகம் தனது நீர்த்தேக்கங்களில் தேக்க முடியாமல் வெளியேற்றிய உபரி நீரை தங்களுக்கு சாதகமாக சொந்தம் கொண்டாட முடியாது என்றும், அதனை தமிழகத்திற்கு வழங்கிய கணக்கில் சேர்க்க இயலாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மே 26 அன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும், இப்பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதாலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், வரும் ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரை பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterTamil Naduகர்நாடகம்காவிரி நீர்தமிழகம்நீர் மேலாண்மை ஆணையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பசுவதைக்கு தடை: அவசர மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
Next Article 5 மணி நேரத்தில் குழந்தை மீட்பு: தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வின் முடிவுகளுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் அரிய கடிதம் மற்றும் அவர்…

ஆகஸ்ட் 21, 2026

விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை இறக்குமதி? மத்திய அரசு பரிசீலனை

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை…

ஆகஸ்ட் 21, 2026

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ்…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

3 வயது குழந்தை மரணம்: கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை – காவல்துறை விளக்கம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது குழந்தை மரணம் தொடர்பாக, கூட்டு பாலியல் வன்கொடுமை என பரவிய தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஒருவர் மட்டுமே கைது…

2 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: விஜய்யின் முடிவுக்கு காத்திருப்பு!

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதற்கான அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜய்யே முடிவெடுப்பார் என கிரிஷ் சோடங்கர்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: மக்களுக்கு அடுத்த ஷாக்!

தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது. சீரக சம்பா அரிசியின் விலை ஓராண்டில் ரூ.96 அதிகரித்துள்ளது. மேலும்…

2 Min Read
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் அமையவிருக்கும் மின்னணு பொருட்கள் உற்பத்தி மையங்கள்
பிசின்ஸ்

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ரூ.1,012 கோடியில் மின்னணு உற்பத்தி மையங்கள்

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒரு மின்னணு பொருட்கள் உற்பத்தி மையம் அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.1,012 கோடி மதிப்பில் உருவாகும் இந்த திட்டங்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?