முடி வளர்ச்சிக்கு பசலைக்கீரையின் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். வறண்ட மற்றும் சீரற்ற தலைமுடியைக் கொண்டவர்களுக்கு, ரோஸ்மேரி எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இந்த இரண்டையும் சேர்த்து ஒரு சிறப்பு எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை விரிவாகக் காண்போம்.
முதலில், நறுக்கிய பசலைக்கீரை 3 கப் மற்றும் பிரெஷ் ரோஸ்மேரி இலைகள் 2 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையைக் கொண்டு எப்படி முடி வளர்ச்சி எண்ணெய் செய்யலாம் என்பதைப் பார்ப்போம். பசலைக்கீரையை வெதுவெதுப்பான நீரில் 3 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், அந்த கீரையை நீரில் இருந்து வடிகட்டி, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து, அரைத்த பசலைக்கீரை விழுதோடு ரோஸ்மேரி இலைகளைச் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைத் தலையில் நன்றாகத் தடவி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பின்பற்றலாம்.
பசலைக்கீரை மற்றும் ரோஸ்மேரி மாஸ்க் பயன்படுத்துவதால் தலை முடிக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, முடி உதிர்தலைக் குறைக்கிறது, மற்றும் பொடுகையும் கட்டுப்படுத்துகிறது. இளநரையைப் தடுக்கவும் இந்த பசலைக்கீரை மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.