MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

க்ரைம்

ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

Admin
Last updated: மே 17, 2026 1:00 மணி
Admin
Share
SHARE

சென்னை: ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, வெற்றி நகர் முதல் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டதில் 62 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தயாளன் (21), உதய பிரசாந்த் (21), கோபாலகிருஷ்ணன் (21) என்பதும், அவர்களுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கோபி என்பவரிடமிருந்து மேலும் 38 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். போலீஸ் சோதனைகளைத் தவிர்க்க, இவர்கள் தொழில்முறை பைக் ரைடர்கள் போல மாறுவேடமிட்டு, பைக் டூரிஸ்ட் குழுக்களுடன் கலந்து சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். பின்னர், சிறு கடத்தல் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டியுள்ளனர்.

இதேபோல், நேற்று அயப்பாக்கம் காவல்துறையினர் டோனே கலா கேம்ப் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (21), ருகேஷ் குமார் (19) ஆகியோரையும் பிடித்து சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ கஞ்சா, 1,700 நைட்ரா செப்பம் மாத்திரைகள், 300 டாபெண்டடோல் மாத்திரைகள் என மொத்தம் 2,000 போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இருவரையும் கைது செய்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai DrugsPolice Actionஆவடிகஞ்சா கடத்தல்போதை மாத்திரைபோதைப்பொருள் தடுப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக-அதிமுக கூட்டணி முயற்சி? ரஜினிகாந்த் விளக்கம்!
Next Article ஐபிஎல் 2026: கொல்கத்தா பிளே ஆப் செல்லுமா? இன்றைய புள்ளிவிவரங்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

இடஒதுக்கீடு சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவி: சிராக் பாஸ்வான்

சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அமைச்சர்…

ஆகஸ்ட் 23, 2026

ஆட்டோவை ரெயிலில் ஏற்றி சொந்த ஊர் சென்றதாக பரவும் வீடியோ: ரயில்வே விளக்கம்

சொந்த ஊருக்குச் செல்ல ஆட்டோவை ரெயிலில் ஏற்றிச்…

ஆகஸ்ட் 23, 2026

போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்

போக்சோ வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இடுக்கி…

ஆகஸ்ட் 23, 2026

கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு: ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமறைவு

கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வு கட்டுப்பாட்டு…

ஆகஸ்ட் 23, 2026

பிரதமர் குறித்து அவதூறு: சினிமா ஒப்பனை கலைஞர் உள்பட 3 பேர் கைது

பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2,070 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 2,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடு போனது. இது தொடர்பாக மருமகன் தட்​சிணா​மூர்த்​தி,…

1 Min Read
கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் தொடர்பான செய்தி
க்ரைம்

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்: இன்ஸ்டாகிராம் நண்பர்களே காரணம்?

சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பர்களுடன் பழகிய மனைவியை, கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் சின்னா கைது செய்யப்பட்டார்.

2 Min Read
க்ரைம்

சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?