இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி மாற்றம் குறித்து அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்தை அஷ்வின் தனது யூடியூப் சேனல் வாயிலாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அணியில் தேவையற்ற மாற்றங்களைத் தவிர்த்து, நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அஸ்வின் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. அவர் 52 சர்வதேச டி20 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இவ்வளவு சிறப்பான கேப்டனை ஏன் நீக்க வேண்டும் என்று அஸ்வின் கேள்வி எழுப்புகிறார். 'தோனி கோப்பையை வென்ற பிறகு ஃபார்ம் இழந்தார். அவரை அடுத்த ஆண்டு நீக்கி விடுவீர்களா?' என்று அவர் உதாரணம் காட்டினார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவரை அணியிலிருந்து முழுமையாக நீக்குவது தவறான முடிவு என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, அவர் அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியவர் என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவரை கேப்டனாக ஏன் மாற்ற வேண்டும் என்பதே அவரது கேள்வியாக உள்ளது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சைத் தவிர வேறு பெரிய குறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ரஜத் படிதார் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ரன்களைக் குவித்திருந்தாலும், அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கக் காத்திருக்க வேண்டும் என்றும், ஷிவம் துபே அந்தப் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் படிதாருக்கு இப்போதைக்கு அணியில் வாய்ப்பு குறைவு என்றும் அஸ்வின் விளக்கினார்.