MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

தமிழ்நாடு

ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம்: அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு!

Admin
Last updated: ஜூலை 7, 2026 1:31 மணி
Admin
Share
அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
SHARE

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூ.50 கோடி குதிரை பேர விவகாரம் தொடர்பாக, தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்றாம் நாளாக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் காவல் நிலையத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என தெரிவித்தார்.

தன்னை தி.மு.க-வில் இணைய அழைப்பதற்காக, தனது ஆதரவாளர் ஒருவர் ரூ.50 கோடி பேரம் பேசியதாக விஜி சரவணன் நேற்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அனிதா ராதாகிருஷ்ணன் கிண்டலாக பதிலளித்தார். 'யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். நீங்கள் வேண்டுமென்றால் எனக்கு ஒரு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள். முதலில் 50 கோடி ரூபாய் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா' என அவர் கேட்டார்.

மேலும், 'அவர் கூறும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானது. நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை, கஞ்சா வியாபாரம் செய்யவில்லை. பழுத்த மரம் தான் கல்லடி படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

தன்னை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்றதாக விஜி சரவணன் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். 'ஒருவேளை அவர் லாரியை மடக்கி ரூ. 300 கேட்டு இருக்கலாம். கோபத்தில் அவர் மீது இந்த சம்பவம் நடத்திருக்கலாம்' என அவர் கூறினார்.

ஸ்ரீவைகுண்டம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான விஜி சரவணன், தன்னை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தி.மு.க-வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் ஒருவர் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும், அதற்கு இணங்க மறுத்ததால் மிரட்டல் விடுத்ததாகவும், லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணன் அளித்துள்ள மறுப்பு, அரசியல் களத்தில் மேலும் விவாதங்களை எழுப்பியுள்ளது. உண்மை என்ன என்பது விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:50 கோடி பேரம்அனிதா ராதாகிருஷ்ணன்தமிழக அரசியல்தவெகதிமுகதிருச்செந்தூர்விஜி சரவணன்ஸ்ரீவைகுண்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்
Next Article தமிழக முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு கடலூரில் விபத்து: உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் விஜய் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் திடீர் கருமேகம்: வானிலை மையம் பரபரப்பு விளக்கம்!

சென்னையை திடீரென சூழ்ந்த கருமேகங்கள் மற்றும் பலத்த காற்றுக்கான காரணத்தை வானிலை மையம் விளக்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சியே காரணம்.

1 Min Read
தமிழ்நாடு

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்…

1 Min Read
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி
தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாருக்கு சீருடை அணிந்து கடைக்கு செல்ல தடை

போக்குவரத்து காவலர்கள் சீருடையுடன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

2 Min Read
லைஃப் ஸ்டைல்

திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு தடை: பறிமுதல் செய்யப்படும்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வரும் 1-ஆம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?