MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
தமிழ்நாடு

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

Admin
Last updated: May 17, 2026 10:29 am
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்திய தேர்தலில் 5,872 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உடன்குடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எவர் எவரோ ஆட்சிக்கு வந்துவிட்டு ஏதேதோ பேச நினைக்கிறார்கள். இன்னும் 4 மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும். ஆதவ் அர்ஜுனாவுக்கு தைரியம் இருந்தால் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூருக்கு வரட்டும். நானும் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இருவரும் திருச்செந்தூரில் போட்டி போட்டு பார்க்கலாம். இது எந்த ஊர் தெரியுமா? எந்த வகையிலும் எவரையும் வீழ்த்திவிடுவோம்" என்று ஆவேசமாக பேசினார்.

மேலும், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல் மாற்றி வைத்திருந்தார். ஆனால், கொளத்தூர் தொகுதி மக்கள் கேடுகெட்டவர்கள். உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகத்தை எந்த இடத்திலும் நுழைய முடியாத அளவுக்கு அடித்து விரட்டுவோம் என்றும் அவர் பேசினார். அடுத்த 4 முதல் 6 மாதங்களில் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல் அமைச்சராக வருவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்க பார்க்கிறார் என்றும், லாட்டரியில் கொள்ளையடிக்கும் பாவி ஆதவ் அர்ஜுனா என்றும் கடுமையாக விமர்சித்தார். கள்ள லாட்டரி சீட்டு விற்பவரும், கஞ்சா விற்பவரும் தவெக எம்.எல்.ஏ.வாக மாறியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என கூறும் முதல்வர் விஜய், தனது மனைவிக்கு முதலில் பதில் சொல்ல வேண்டும் என்றும், அவரது மனைவி, மகள் அவரது பதவியேற்பு விழாவிற்கு வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர் முதல்-அமைச்சராக வந்தால் தமிழகம் அழிந்துவிட்டது என்றுதான் அர்த்தம் என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:DMK MLATamil Nadu Politicsஅனிதா ராதாகிருஷ்ணன்கொளத்தூர் மக்கள்திருச்செந்தூர் தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆந்திராவில் 3-வது குழந்தைக்கு ரூ.30,000: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: பேராசிரியர்கள் சிக்கினர்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25 முதல் ஜூலை 24 வரை…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

சத்தீஸ்கரில் பெட்ரோல் தட்டுப்பாடு: ரூ.300 கட்டுப்பாடு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்திகள் காரணமாக,…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் கோரிக்கை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தம்!

பெட்ரோல், டீசல் விலையில் திடீர் உயர்வால் பொதுமக்கள் பாதிப்பதாகக் கூறி, விலை உயர்வை திரும்பப் பெற லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, அவரது காதலியை வைத்து போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை…

1 Min Read
தமிழ்நாடு

அ.ம.மு.க.விலிருந்து எஸ். காமராஜ் நீக்கம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

அ.ம.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக டி.டி.வி.…

2 Min Read
தமிழ்நாடு

வேலூர்: கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் – கொலையா? போலீசார் விசாரணை

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் தினேஷ் (வயது 22). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?