MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் அதிரடி: இ.பி.எஸ். எடுத்த முடிவு – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் அதிரடி: இ.பி.எஸ். எடுத்த முடிவு – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அதிமுகவில் அதிரடி: இ.பி.எஸ். எடுத்த முடிவு – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி: இ.பி.எஸ். எடுத்த முடிவு – சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு

Admin
Last updated: மே 13, 2026 10:31 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர்last-minute-ல் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க கடைசி நேரத்தில் தயாராக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் அதிமுக நிர்வாகிகள் 26 பேரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, நீக்கப்பட்டவர்களில் முக்கிய நபர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சி.வி. சண்முகம், அதிமுகவின் தற்போதைய தலைமை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"அதிமுக பலமுறை தோல்விகளைச் சந்தித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் கட்சியை மீட்டெடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தகுதியும், திறமையும், ஜெயலலிதாவிடம் இருந்தது. 1996-ல் பெரும் தோல்வி ஏற்பட்டபோதும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சியை மீண்டும் வெற்றி பெற வைத்தார். வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிப்பவரே உண்மையான தலைவர். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அரவணைத்துச் செல்பவரே தலைவர். ஆனால், வெற்றி பெற்றால் தன்னால் வெற்றி என்றும், தோல்வி அடைந்தால் நிர்வாகிகளைப் பழிபோடும் தலைமை அதிமுகவில் உள்ளது. ஜெயலலிதா கௌரவம் பார்க்காதவர். வீடு தேடி வந்தவர்களை, அரை சதவீதம், ஒரு சதவீதம் எனக்கூறி, 210 தொகுதிகளில் வெற்றிப்பெறுவேன் எனக்கூறி ஒரு ஏசி அறையில் அமர்ந்துகொண்டு வந்த தலைவர்களை விரட்டியடித்தார். ஆனால், இன்றைய தலைமை அப்படியில்லை" என அவர் கடுமையாக விமர்சித்தார்.

"கடைசி நேரத்தில்கூட தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. அவர்களுடன் கூட்டணி வைத்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என நாங்கள் கூறினோம். ஆனால், எங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, 'எனக்குத் தெரியும்' என தலைமை கூறியது. 2024 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என நாங்கள் கூறியபோதும், 'வேண்டாம்' என்றார். தேர்தலின் முடிவில் பெரும் தோல்வி ஏற்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் திடீரென்று அமித் ஷா வீட்டிற்குச் செல்கிறோம் எனக்கூறி, தன்னிச்சையாக கூட்டணியை அறிவித்தார். யாரைக் கேட்டார்? யாரோடும் கலந்தாலோசிக்கவில்லை. இன்றுவரை அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை. தே.மு.தி.க.வை இணைக்கக் கூறினோம். வாக்குறுதிப்படி அவர்களுக்கு எம்பி சீட் கொடுக்கச் சொன்னோம். எங்கள் கருத்தை உதாசீனப்படுத்தினார். அப்போதும் அவர்கள் கூட்டணியில் சேர வந்தார்கள், ஆனால் சேர்க்கவில்லை. அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என நாங்கள் தான் சொன்னோம். அவரைப் பொதுச்செயலாளராக அறிவித்தோம். நாங்கள் எடுத்த முடிவுக்காக இப்போது அனுபவிக்கிறோம்" என்றார்.

"கடந்த 4 ஆண்டுகளில் பொதுச்செயலாளர் செய்த ஒரே பணி, நீக்குவது, நீக்குவது, நீக்குவது மட்டும்தான். ஒன்று சிறைவாசம் அல்லது வனவாசம். கேள்வி கேட்டால் கட்சியில் இருந்து நீக்கிவிடுகிறார். அவர் இன்று நீக்கிய அனைவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. உண்மையான தொண்டர்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்" என்று சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகை கிரக் சீதா: ‘பண்ணை வீட்டுக்கு வந்தால் ரூ.25 லட்சம்’ – பரபரப்பு குற்றச்சாட்டு
Next Article சமந்தா நடிக்கும் ‘மா இன்டி பங்காரம்’ – புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சரணடைந்த மாவோயிஸ்ட்கள் மற்றும் காவல்துறையினர்

ஜார்க்கண்டில் 16 மாவோயிஸ்ட்கள் சரண்: ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஜார்க்கண்டில் 5 பெண்கள் உட்பட 16 மாவோயிஸ்ட்கள், காவல்துறையினரிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனர்.…

ஜூலை 29, 2026

கங்கனா ரணாவத் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பாஜக…

ஜூலை 29, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி தமிழகத்திற்கு நீர்…

ஜூலை 29, 2026

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு: லோகேஷ் பதவி விலக ரோஜா வலியுறுத்தல்

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அமைச்சர்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா: மக்களவையில் காரசார விவாதம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனைகளுக்கு தீர்வு…

ஜூலை 29, 2026

You Might Also Like

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு
தமிழ்நாடு

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது.

2 Min Read
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல், மயக்கம்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் மயக்கமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

2 Min Read
கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறையினர் ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகம்: மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கொடூர கணவன்

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், சுத்தியலால் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், இரண்டாம் தளத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி கன்னியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?