MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசியல்

ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: மே 28, 2026 10:05 காலை
Admin
Share
SHARE

திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு காவலர்களும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதம் செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, ஜூலை 31-க்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andhra PradeshTamil Naduசென்னை உயர் நீதிமன்றம்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைபோலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Next Article கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்று மதியம் வரை மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்…

0 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரம்: மோடிக்கு ஸ்டாலின் அவசரக் கோரிக்கை!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக, 2026-ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கு அவசர சட்டம்…

3 Min Read
மின்சாரத்துறை பணியிட மாற்றம் தொடர்பான ஆன்லைன் கலந்தாய்வு
தமிழ்நாடு

மின்சாரத்துறை பணியிட மாற்றம்: ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது

மின்சாரத்துறை பணியாளர்களுக்கான ஆன்லைன் பணியிட மாற்றம் கலந்தாய்வு தொடங்கியது. ஒரு வருட பணி நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே மாற்றம்.

1 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு பார்சல் வாங்கி செல்வதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?