MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக கண்டனம்: ‘சீண்டினால் எதிர்வினை நிச்சயம்’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக கண்டனம்: ‘சீண்டினால் எதிர்வினை நிச்சயம்’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக கண்டனம்: ‘சீண்டினால் எதிர்வினை நிச்சயம்’

தமிழ்நாடு

அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக கண்டனம்: ‘சீண்டினால் எதிர்வினை நிச்சயம்’

Fernandez
Last updated: ஆகஸ்ட் 20, 2026 9:50 மணி
Fernandez
Share
அதிமுக அலுவலகம் அல்லது அதிமுக கட்சித் தலைவர் ஒருவர் பேசும் காட்சி
அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட கண்டனப் பதிவு
SHARE

ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி, அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் அதிமுகவை சீண்டிப் பார்க்கும் வகையில் பேசி வருவது கண்டனத்துக்குரியது என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் குறித்தான பதிலுரையில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அதிமுகவை விமர்சித்ததற்கு அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

அமைச்சர் ஆனந்த் தனது கட்சி மற்றும் தலைவர் குறித்து பேசியது யாருக்கும் கவலையில்லை என்றும், பிளாக் டிக்கெட் விற்றது ஒரு வரலாறா என கேள்வி கேட்கப் போவதில்லை என்றும் அதிமுக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தேவையே இல்லாமல் அதிமுகவை சீண்டும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அதற்கான எதிர்வினையை அவர் நிச்சயம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதிமுக வலியுறுத்தியுள்ளது.

'சர்கார்' திரைப்பட பேனர்களை கழகத் தொண்டர்கள் கிழித்ததால் தான் அதிமுக ஆட்சி 2021-ல் அமையவில்லை என்று அமைச்சர் கூறியதாக அதிமுக குறிப்பிட்டுள்ளது. அரசியல் புரிதலற்ற 107 அறிவிலிகள் சட்டமன்றத்தை ஆக்கிரமித்திருப்பதால் இந்த அலங்கோலம் ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.

உலகத் தமிழர்களின் இதயங்களில் வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இயற்பெயரை தவறாக சித்தரித்து ஒரு படம் வந்தால், அம்மாவின் வழிவந்த தொண்டர்கள் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. எப்போதும், தங்கள் இதயதெய்வங்களைப் பழித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், இயக்கத்தின் தொண்டன் வீறுகொண்டு எழுவான் என்றும், அவனது அரசியல் எதிர்வினை எதிரிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துக் கட்டிவிடும் என்றும் அதிமுக எச்சரித்துள்ளது.

மேலும், 'சர்கார்' படத்தில் தூக்கி எறிவது போல காட்சி அமைத்த "அம்மா லேப்டாப்"களை இப்போது ஏன் வழங்குகிறீர்கள் என்றும் அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. அன்று பழித்துப் பேசிய அம்மா அவர்களின் பெயரை, அன்று படத்தில் தூக்கி எறிந்த அவரின் மக்கள் நலத் திட்டங்களை இன்று அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதற்கு கேவலமாக இல்லையா என்றும் அதிமுக கேட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றம் வேண்டும் என்ற தமிழக மக்களின் சாதாரண எண்ணப்படி தான் வெற்றி வாய்ப்பு நழுவியது என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. அப்போதும் 33.3% வாக்குகளோடு, 75 தொகுதிகளில் வென்று, மக்களின் ஆதரவோடு ஐந்தாண்டுகள் பிரதான எதிர்க்கட்சியாக பணியாற்றினோம் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.

எனவே, "பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது, ஒரு நடிகனைக் கண்டு அரசாங்கமே" என்றெல்லாம் உருட்டும் உங்கள் பழைய போக்கை தியேட்டர் வாசலோடும், ட்விட்டர் அணில் குஞ்சுகளோடும் நிறுத்திக் கொள்ளுங்கள் அமைச்சரே என அதிமுக காட்டமாக கூறியுள்ளது.

(பி.கு. : 'சர்கார்' பட சர்ச்சையில் ஒரு விஷயத்திற்கு வேண்டுமானால் வருத்தப் படுகிறோம்- அந்த குப்பைப் படத்திற்கு எங்களால் ஒரு 2 நாட்கள் Free Promotion கிடைத்ததற்காக..!!)” என்றும் அதிமுக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKMinister AnandPuspa AnandSarkar Controversyஅதிமுகஅமைச்சர் ஆனந்த்சர்கார் சர்ச்சைதமிழக அரசியல்புரட்சித் தலைவி அம்மாபுஸ்ஸி ஆனந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முன்னாள் சபாநாயகர் அப்பாவு உங்கள் மாமி ஆட்சி தொடர வேண்டுமா CM சார்? – அப்பாவு கேள்வி
Next Article பாமக எம்.எல்.ஏ செளமியா அன்புமணி சட்டப்பேரவையில் பேசுகிறார் ரேஷன் கடைகளுக்கும் டாஸ்மாக் போல ஆன்லைன் வசதி: செளமியா அன்புமணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளம் மெட்ரோ ரயில் லிமிடெட் பெயர் மாற்ற பரிந்துரை குறித்த அறிவிப்பு

கொச்சி மெட்ரோ பெயர் மாற்றம்: கேரள மெட்ரோ என மாற்ற பரிந்துரை

கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தை ‘கேரளம் மெட்ரோ ரயில் லிமிடெட்’ என…

ஆகஸ்ட் 21, 2026

இண்டிகோ இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு: முன்பதிவு பாதிப்பு

இண்டிகோ விமான நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு…

ஆகஸ்ட் 21, 2026

ஏமன், சோமாலியா அருகே 2 இந்திய கப்பல்கள் கடத்தல்: 22 மாலுமிகள் மீட்பு

ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளில் 22…

ஆகஸ்ட் 21, 2026

அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு: முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல…

ஆகஸ்ட் 21, 2026

ஆசிரியர் அறைந்ததில் மாணவன் உயிரிழப்பு: விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி

விசாகப்பட்டினத்தில் வீட்டுப்பாடம் எழுதாத 6 வயது மாணவனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

அமர்நாத் குகைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம்
தமிழ்நாடு

அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்: 4.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக, காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

2 Min Read
டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு ஏலத்தில் விற்பனை
தமிழ்நாடு

482 கோடிக்கு ஏலம் போன டி-ரெக்ஸ் எலும்புக்கூடு: உலக சாதனை!

நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 'டி-ரெக்ஸ்' டைனோசர் எலும்புக்கூடு 'கஸ்' சுமார் 482 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது. இது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின்…

0 Min Read
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பாதை
தமிழ்நாடு

சதுரகிரி மலைக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகள்: பக்தர்களுக்கு அறிவிப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. இனி காலை 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதி.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?