கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதற்கான முகவர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை முகவர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், தோகைமலை, பரமத்தி, சின்னதாராபுரம், கடவூர், தென்னிலை போன்ற பகுதிகளுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மொத்த பால் உபபொருட்கள் விற்பனை செய்ய, சொந்தமாகவோ அல்லது வாடகை அடிப்படையிலோ இடவசதி, பால் பொருட்களை இருப்பு வைக்க குளிர்சாதன வசதி, மற்றும் உபபொருட்களை விநியோகம் செய்ய வாகன வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சில்லறை விற்பனை முகவர்கள், விற்பனை செய்வதற்கான சொந்த அல்லது வாடகை கட்டிடம் மற்றும் இடவசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிட், தோரணக்கல்பட்டி, டி.செல்லாண்டிபாளையம் அஞ்சல், கரூர் 639003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். விற்பனை பிரிவுக்கான தொலைபேசி எண்கள்: 95859 75281, 96983 77992, 97865 71615.