MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

Admin
Last updated: May 17, 2026 3:29 pm
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, அவரது மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மைத்துனர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த முருகன் (45), ஐஸ் வியாபாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி பொன்மொழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறின் போது, முருகனின் மனைவி பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) தலையிட்டு, மகளை சமாதானம் செய்து, முருகனை கண்டித்துள்ளார். மேலும், முருகனின் குடிப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். இதனால் மாமியார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதில் காசி அம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காசி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவத்தை தனது மகன்களான பழனிசாமி (51) மற்றும் பாண்டியன் (41) ஆகியோரிடம் காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முருகன் வீட்டுக்கு சென்று, 'ஏன் எங்கள் தாயை தாக்கினாய்?' என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மைத்துனர்கள் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அப்போது, பாண்டியன் அங்கிருந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பயந்துபோன பழனிசாமி மற்றும் பாண்டியன், முருகன் விபத்தில் சிக்கியதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், மைத்துனர்களே முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeMurderTamil Nadu Newsகொலைதிருப்பூர் செய்திகள்பல்லடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுச்சேரி: காங்கிரஸ் – தவெக கூட்டணி? நாராயணசாமி பகீர்!
Next Article பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’: ஜோம்பி ஜானரில் அதிரடி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நொய்டாவில் தேனிலவில் மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் மீது வழக்கு

சிக்கிமில் தேனிலவுக்கு சென்ற புதுமண பெண், மாடிப்படிக்கட்டில் இருந்து தள்ளி கொலை செய்ய…

July 1, 2026

இந்தியா-பாகிஸ்தான்: கைதிகள் பட்டியல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஆண்டுதோறும் ஜனவரி…

July 1, 2026

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே…

July 1, 2026

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மதுரையில் மாணவன் கொலை: செல்வப்பெருந்தகை வேதனை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது மாணவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேதனை தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை கைது…

1 Min Read
தமிழ்நாடு

கானா பாடகர் கொலை: தறிகெட்டு ஓடும் காவல்துறை – இபிஎஸ் கண்டனம்

சென்னையை அடுத்த படப்பையில் கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் ஹெல்மெட் அணிந்த கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இபிஎஸ் கடும்…

1 Min Read
தமிழ்நாடு

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் கொட்டிய பாலை அள்ளிச் சென்ற மக்கள்!

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் கொட்டிய ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை அப்பகுதி மக்கள் கேன்களில் அள்ளிச் சென்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை: எடப்பாடி அருகே சோகம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 'நீட்' தேர்வு மறுதேர்வு குறித்த அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 'நீட்'…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?