MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!

அரசியல்

ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!

Admin
Last updated: மே 17, 2026 12:01 மணி
Admin
Share
SHARE

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் ஏன் சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விரிவாக விளக்கமளித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் தர வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன்' என்று கூறினார்.

'தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலின் சாரை சந்தித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்ட கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன். ஆனால், விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது, அதைத் தடுக்கவே நான் அங்கு சென்றதாக வதந்திகள் பரவின. அந்தச் சூழலில் அப்படிப் பேச முடியாது. அப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் நான் அல்ல' என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

'மேலும், நான் அவருக்கு (விஜய்) வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. அவர் வென்றதும் எக்ஸ் தளத்தில் எனது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தேன். விமான நிலையம் செல்லும் வழியில் ஒரு நபர், 'விஜய் முதல்வர் ஆகிவிட்டார்' என்று சொன்னபோது, நான் புன்னகையுடன் சென்றுவிட்டேன். அதை வைத்து நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. எனக்கு விஜய் மீது பொறாமை என்றும் கூறப்பட்டது. நான் அரசியலில் இல்லாதபோது, அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது எங்களுக்கு நல்லதல்ல என்று நான் அவரிடம் கூறியுள்ளேன்' என ரஜினிகாந்த் விளக்கினார்.

'சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன பொறாமை? அவர் இளம் வயதில் முதல்வர் ஆகியுள்ளார். எம்ஜிஆர், என்டிஆர் செய்த சாதனைகளை விட அவரது சாதனை பெரியது. தனியொருவராக பெரிய கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்து அவர் சாதித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. மக்கள் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக எனது வாழ்த்துகள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். எனது ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என ஏற்கெனவே கூறியுள்ளேன். அரசியல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் கொண்டு வந்துள்ள மாற்றம் இது' என்று தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SuperstarTamil Nadu Politicsஅரசியல்ரஜினிகாந்த்விஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Next Article ஆண்களே கவனம்! குடும்ப வன்முறையால் தற்கொலை – அரசுக்கு அதிரடி கோரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதுகிறார்
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் விஜய் கோரிக்கை

ராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் மற்றும் அவர்களது படகை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசன் விலகல்? – பரபரப்பு தகவல்

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜி.கே.வாசன் விலக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே வடசென்னை மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் உள்ளிட்டோர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

திருப்பதியில் தரிசனம்: 14 மணி நேர காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று அரசியல் பொதுக்கூட்டம் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

1 Min Read
அரசியல்

விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, கல்விக்கு இணையாக மேம்படுத்த விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?