MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
தமிழ்நாடு

கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

Admin
Last updated: May 14, 2026 6:11 pm
Admin
Share
SHARE

தூத்துக்குடியில் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதமாகி, மனைவியே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல், அவரது கணவர் மற்றும் அவரது தம்பி உதவியுடன் தோட்ட்த்தில் புதைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த 62 வயதான செல்லத்துரை என்பவரின் மகள் பிருந்தாதேவி (32). இவருக்கு கிருஷ்ணகுமார் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பிருந்தாதேவி குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிருந்தாதேவி வீடு திரும்பாததால், அவரது தந்தை செல்லத்துரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பிருந்தாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் கட்டிட ஒப்பந்ததாரர் மாரிமுத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவரது மனைவி சரவணப் பிரியா (34) வீட்டிற்கு சென்றதும், பின்னர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாரிமுத்து மற்றும் சரவணப் பிரியாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பிருந்தாதேவி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி மாரிமுத்து வீட்டிற்கு வந்து சென்ற பிருந்தாதேவிக்கும், மாரிமுத்துவுக்கும் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பிருந்தாதேவி மாரிமுத்துவுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த சரவணப் பிரியாவுக்கும், பிருந்தாதேவிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணப் பிரியா, பிருந்தாதேவியை தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது கணவர் மாரிமுத்து மற்றும் அவரது தம்பி கார்த்திக் உதவியுடன் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்.

இதையடுத்து சரவணப் பிரியா மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். உடலை ஏற்றிச் சென்ற காரையும், தலைமறைவான கார்த்திக்கையும் தேடி வருகின்றனர். மாரிமுத்துவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், தோட்ட்த்தில் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர். இரவு நேரமானதால், இன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பிருந்தாதேவியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:MDTV 24x7Tamil Nadu Crimeகள்ளக்காதல்கொலைதூத்துக்குடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
Next Article இந்திய ‘ஏ’ அணிக்கு வைபவ் சூர்யவன்ஷிக்கு முதல் வாய்ப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டெல்லியில் காங்கிரஸ்…

May 14, 2026

கேரளாவின் புதிய முதல்வர்: வி.டி.சதீசன் யார்? முழு விவரம்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி!…

May 14, 2026

உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

May 14, 2026

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெரியார் திடலில் முதலமைச்சர் விஜய் – கி.வீரமணியுடன் சந்திப்பு

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி பூங்கொடுத்து கொடுத்தார். பதிலுக்கு…

0 Min Read
தமிழ்நாடு

சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை…

1 Min Read
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மனைவி பிரிந்ததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் வெயில்முத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?