இயக்குநர் மற்றும் நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் கடந்த ஜூன் 25 அன்று கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி-யின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண விழாவில் கலந்துகொண்டார். திருமண விழாவில் அனைவரும் பட்டு வேட்டி, சட்டையில் பங்கேற்ற நிலையில், பாக்யராஜும் அழகிய பட்டு வேட்டி சட்டையுடன் மணமக்களை வாழ்த்தி வீடியோக்கள் வெளியானது.
திருமண விழா முடிந்த அன்றிரவு சென்னை திரும்பிய பாக்யராஜ், மறுநாள் காலை நடைப்பயிற்சி சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கே. பாக்யராஜ் மறைந்த செய்தி வெளியான நிலையில், நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் திருமண புகைப்படங்களை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு தனது இரங்கல் பதிவில், 'அமைதியில் இளைப்பாறுங்கள். உங்களுடன் நான் இருந்த தருணங்கள் என் நினைவில் என்றும் இருக்கும். மிஸ் யூ' என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், பாக்யராஜுக்கு இரங்கல் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, தனது கணவர் சுந்தர்.சி உடன் கோவாவில் மகளின் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை குஷ்பு பகிர்ந்தார். பாக்யராஜின் இழப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது தேவையா என சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.