MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா சேவைகள் நிறுத்தம்: 6 வழித்தடங்களில் பாதிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா சேவைகள் நிறுத்தம்: 6 வழித்தடங்களில் பாதிப்பு
இந்தியா

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா சேவைகள் நிறுத்தம்: 6 வழித்தடங்களில் பாதிப்பு

Admin
Last updated: May 13, 2026 7:32 pm
Admin
Share
SHARE

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சர்வதேச சூழல்கள் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் தனது 6 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.

இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, விமானப் போக்குவரத்துத் துறை தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாகவும், மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது. சர்வதேச சந்தையில் விமான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடுகளும் ஏர் இந்தியாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே சில சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளை ஏர் இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது இந்த 6 வழித்தடங்களில் சேவைகள் ஆகஸ்ட் மாதம் வரை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, மும்பை-நியூயார்க், டெல்லி-ஷாங்காய், சென்னை-சிங்கப்பூர், மும்பை-டாக்கா மற்றும் டெல்லி-மாலே ஆகிய வழித்தடங்களில் இந்த தற்காலிக நிறுத்தம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த 6 வழித்தடங்களில் முழுமையாக சேவைகள் நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், 20-க்கும் மேற்பட்ட பிற சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் வாராந்திர இயக்க எண்ணிக்கையையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது. இருப்பினும், மாதத்திற்கு 1,200-க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் வட அமெரிக்காவிற்கு வாரத்திற்கு 33, ஐரோப்பாவிற்கு 47, இங்கிலாந்திற்கு 57, ஆஸ்திரேலியாவிற்கு 8, தூர கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் சார்க் பிராந்தியங்களுக்கு 158, மொரிஷியஸிற்கு 7 விமானங்கள் அடங்கும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக இணைப்பு உறுதி: சசிகலா நம்பிக்கை – திமுகவுக்கு எச்சரிக்கை
Next Article பெட்டிக்கடையில் 9 கிலோ போதைப்பொருள்: உரிமையாளர் கைது!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

5 நாடுகளுக்கு பிரதமர் மோடி: முக்கிய பயண திட்டம் வெளியானது!

பிரதமர் நரேந்திர மோடி, மே 15 முதல் 20 வரை ஐக்கிய அரபு…

May 15, 2026

நீட் தேர்வு இனி ஆன்லைனில்! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்பிற்கான நீட்…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ராகுல் காந்தி கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ராகுல்…

May 15, 2026

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

நீட் தேர்வு இனி கணினி வழித் தேர்வாக…

May 15, 2026

எஸ்ஐஆர் பணிகள்: 19 மாநிலங்களில் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்…

May 15, 2026

You Might Also Like

இந்தியா

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக அசாமின் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.…

1 Min Read
இந்தியா

தி.மு.க.-வை கைவிட்ட காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, முதுகில் குத்தும் கட்சி: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்தது. தேர்தல் முடிவு 4-ந்தேதி வெளியான…

1 Min Read
இந்தியா

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? முழு விவரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகாரில் தொடங்கிய இந்த விவகாரம், நாடு முழுவதும் பரவி பலரை கைது செய்ய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?