கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சனை என்றும், போராட்டம் நடத்துபவர்களின் நடத்தை அல்ல என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளிய கல்வி முறையின் தோல்வியே இங்கு முக்கியப் பிரச்சனை. ஆனால், அதை விட்டுவிட்டு, போராட்டம் நடத்துபவர்களின் நடத்தையைப் பற்றிப் பேசுவது சரியல்ல.
ஒரு பெற்றோர் தனது குழந்தையை இழந்து துன்பப்படுவதை விட வேதனையானது வேறெதுவும் இல்லை. பறிபோன ஒவ்வொரு இளம் உயிருக்கும் பின்னால், ஒருபோதும் நீங்காத துயரத்தைச் சுமக்கும் ஒரு குடும்பமும், சீர்குலைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்விகளும் உள்ளன. வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து போன்ற குளறுபடிகளால் பல ஆண்டுகால உழைப்பு ஒரே இரவில் வீணாகிறது.
தங்களுக்கு நேர்மையாக நடக்காத ஒரு அமைப்பில், நேர்மையாக செயல்படுமாறு நம் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. தேர்வு முறைகளில் ஏற்படும் குளறுபடிகள் மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.
மாணவர்களை 'மன்னிக்கலாம்' என்று பேசுவதற்கு பிரதமருக்கு தைரியம் இருக்கிறது. ஆனால், துயரத்தில் இருக்கும் எந்தவொரு பெற்றோரையோ அல்லது வினாத்தாள் கசிவால் எதிர்காலத்தை இழந்த எந்தவொரு மாணவரையோ அவர் சந்திக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்க செயல்.
இந்திய மாணவர்களுக்கு பிரதமரின் மன்னிப்பு தேவையில்லை. மாறாக, பிரதமர் மன்னிப்பு கோருவதே மாணவர்களுக்குத் தேவை. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் நம்பிக்கையுடன் படிப்பைத் தொடர முடியும். பிரதமர் மோடி இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
