விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றுவதில் தற்போது பல நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை தொடர்பான சிக்கல்கள் காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால், படத்தின் ஓடிடி ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அதோடு, திரைப்படம் இணையத்தில் கசிந்ததாலும் படக்குழுவினர் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் அமோக வெற்றி பெற்று, விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதன் காரணமாக 'ஜனநாயகன்' படக்குழுவினர் அளவில்லா மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில், மக்களின் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், படத்தின் தமிழக உரிமை விற்பனை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 'ஜனநாயகன்' படத்திற்கான ஓடிடி ஒப்பந்தத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்திருந்தது. ஆனால், தற்போது பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் 'ஜனநாயகன்' படத்தின் உரிமையைக் கைப்பற்ற தீவிரமாகப் போட்டியிடுகின்றன. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.