MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்

தமிழ்நாடு

தூத்துக்குடியில் லாக்கப் மரணம்? உறவினர்கள் போராட்டம், டிஎஸ்பி விளக்கம்

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 2:54 மணி
Fernandez
Share
தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
SHARE

தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது லாக்கப் மரணம் இல்லை என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் என்பவர், சமீபத்தில் தெற்கு காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடுமையான தலைவலி ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நரம்பியல் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது, அருணாசலம் ஒரு வீடியோ பதிவில், 'காவல் நிலையத்தில் தன்னை போலீசார் லத்திகளால் கொடூரமாகத் தாக்கியதாகவும், தலையிலும் உடலிலும் பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகவும்' கண்ணீருடன் வாக்குமூலம் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அருணாசலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உறவினர்களும் நண்பர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு, காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறை சித்திரவதையால் மட்டுமே வாலிபர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்கப் போவதில்லை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பலத்த கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், 'தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தை அடிக்கவில்லை என்றும், அவரது மரணம் லாக்கப் மரணம் இல்லை' என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'கைதான அன்றே அருணாசலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்குத் தெரிவித்தோம். காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அருணாசலத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மீண்டும் மயங்கி விழுந்தார். கைது செய்யப்பட்ட அன்றைய தினமே அருணாசலம் மயங்கி விழுந்த தகவலை உறவினர்களுக்கு அளித்தோம். மயங்கி விழுந்த அருணாசலத்தை பெற்றோர் மற்றும் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அருணாசலத்தின் தலையில் கட்டி இருந்ததாக மருத்துவர்கள் கூறினர். அருணாசலத்தை நாங்கள் அடிக்கவில்லை, இது லாக்கப் மரணம் இல்லை' என மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Custody DeathHuman Rights ViolationPolice BrutalityThoothukudiஅருணாசலம்காவல்துறை விசாரணைதூத்துக்குடிமனித உரிமை மீறல்லாக்கப் மரணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜாமின் மனு: இன்று விசாரணை
Next Article உயர்ந்த அரிசி விலையைக் காட்டும் கடை வாசலில் உள்ள விலை பட்டியல் தமிழகத்தில் அரிசி விலை உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவிக்கும் படம்

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு மம்முட்டியின் ஆதரவு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் 34-வது நாள் போராட்டத்திற்கு நடிகர் மம்முட்டி…

ஜூலை 23, 2026

மாணவர் போராட்டம்: டெல்லியில் ஜந்தர் மந்தர் அருகே இணைய சேவை முடக்கம்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நள்ளிரவு…

ஜூலை 23, 2026

போராட்டத்தில் பாஜகவினர் ஊடுருவல்! போலீஸ் மீது கல்லெறிந்து பழிபோடுகிறார்கள் – அபிஜீத் திப்கே

நீட் தேர்வில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய…

ஜூலை 23, 2026

ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது – கீதாஞ்சலி குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் கரப்பான் ஜனதா…

ஜூலை 23, 2026

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டம்: காந்தி சமாதியில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் அஞ்சலி

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள…

ஜூலை 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: ரூ.1000 விரைவில் வரும் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம்…

1 Min Read
திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு
தமிழ்நாடு

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு!

கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு, இளைஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடமில்லை எனக் கூறி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

2 Min Read
தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி பாதையில் அர்லேகரும் செல்வது சரியல்ல – மாணிக்கம் தாகூர்

ஆளுநர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளை மட்டுமே பேச வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி பின்பற்றிய அதே பாதையில் தற்போதைய ஆளுநர் ஆர்லேகரும் செல்வது சரியான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?