MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை

விளையாட்டு

IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ ‘ரெட் கார்டு’.. விதிகளை மீறினால் நடவடிக்கை

Admin
Last updated: மே 11, 2026 7:17 மணி
Admin
Share
SHARE

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ கொண்டு வந்த சில விதிகளை அணி உரிமையாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் மதிப்பதே இல்லை என கடும் அதிருப்தி அடைந்துள்ளது. உரிமையாளர்கள் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீரர்களுக்கு அருகே செல்வதும், விதிகளை மதிக்காமல் செயல்படுவதும் அதிகரித்துள்ள நிலையில், பிசிசிஐ தற்போது சாட்டையைச் சுழற்றியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அதிரடி மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

ஐபிஎல் தொடரின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) அளித்துள்ள சமீபத்திய அறிக்கையில், பல அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் போட்டி நடைபெறும் நேரங்களில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் (Restricted Zones) நுழைவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆட்டம் நேரலையில் ஒளிபரப்பாகும் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அமர்ந்திருக்கும் ‘டக்-அவுட்’ பகுதிக்கு மிக அருகே அணி உரிமையாளர்கள் செல்வது விதிமுறை மீறலாகும். இது போன்ற செயல்கள் போட்டியின் நேர்மையை (Integrity) பாதிக்கும் என்பதால் பிசிசிஐ அனைத்து அணிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, சில அணி உரிமையாளர்கள் மைதானத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்களுக்கு துளியும் ஒத்துழைப்பு தருவதில்லை எனத் தெரிகிறது. “அணி உரிமையாளர்களின் நடத்தை மிகவும் கவலை அளிக்கிறது. அவர்கள் விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுகிறார்கள். ஆதாரமாக அவர்கள் டக்-அவுட் அருகே நிற்கும் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன. சிலர் செல்போன்களைக் கூட மைதானத்திற்குள் எடுத்துச் செல்கிறார்கள். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை,” என பிசிசிஐ அதிகாரி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், விஐபி பாக்ஸ் எனப்படும் சிறப்பு அறைகளில் இருந்தபடி வீரர்கள் அல்லது அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் நுழையும் போது அடையாள அட்டையைச் சரிபார்க்கும் பாதுகாப்பு ஊழியர்களிடம் சில உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் புகாராக எழுந்துள்ளது. இதனையடுத்து, ஐபிஎல் அணிகளின் தலைமை அதிகாரிகளுடன் (CEO) பிசிசிஐ அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில், உரிமையாளர்கள் மற்றும் அவர்களது விருந்தினர்கள் மைதானத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இனிவரும் போட்டிகளில் இது போன்ற விதிமீறல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட அணிகள் மீது கடுமையான அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ எச்சரித்துள்ளது.

விளையாட்டு வீரர்களின் கவனம் சிதறாமல் இருப்பதையும், சூதாட்டம் போன்ற தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படாமல் தவிப்பதையும் உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிசிசிஐ எடுத்துள்ள இந்த கடுமையான முடிவு ஐபிஎல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!
Next Article அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

இந்திய டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி
விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு அநீதி: ஹனுமா விஹாரி கடும் விமர்சனம்

இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரின் தேர்வு குறித்து ஹனுமா விஹாரி விமர்சனம். வீரர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி! ‘சுத்தி வளைச்சு பேச விரும்பல’ – வீரர்களை கடுமையாக விமர்சித்த ஸ்ரேயாஸ் ஐயர்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியான நான்காவது தோல்வியாகும், இதனால் விரக்தியடைந்த கேப்டன் ஸ்ரேயாஸ்…

3 Min Read
ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி
விளையாட்டு

ஹர்திக் பாண்டியா கொல்கத்தா வருவாரா? வைரலாகும் வீடியோ!

ஹர்திக் பாண்டியா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறக்கூடும் என்ற தகவல் பரவி வரும் நிலையில், கொல்கத்தா அணி வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் பிரசித் கிருஷ்ணா பந்துவீசும் காட்சி
விளையாட்டு

20 டாட் பால், 2 மெய்டன்: பிரசித் கிருஷ்ணாவின் அசத்தல் பந்துவீச்சு!

இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில், பிரசித் கிருஷ்ணா 20 டாட் பால் மற்றும் 2 மெய்டன் ஓவர்கள் வீசி அசத்தினார். இங்கிலாந்து தொடக்க ஜோடி 192 ரன்கள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?