தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குதிரை பேரத்தை தமிழ்நாட்டில் முதலில் தொடங்கியது திமுகதான். அதற்கு உதாரணம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன். குதிரை பேரத்திற்கு எப்படி பதில் சொல்ல வேண்டுமென்று பாடத்திட்டத்தில் வேறு விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை உருவாக்கிய திமுகவே அது குறித்து பேசலாமா? எங்களுக்கு அந்த அரசியல் இல்லை. வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவல் தவறு. எங்கள் ஆட்சி வலிமையானது என்பதால் குதிரை பேரம் பேச வேண்டிய அவசியமே இல்லை. மைனாரிட்டி அரசை நடத்தியது திமுகதான், தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார். இந்தியாவிற்கே தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாக அமையும். எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று நினைக்கும் ஒரே முதலமைச்சர் ஜோசப் விஜய்தான். தமிழ்நாட்டில் மாற்றங்கள் தேவை என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, முதலமைச்சர் விஜய் அரியணையில் அமர்ந்துள்ளார்" என்று கூறினார்.
You Might Also Like
நாகை அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி
நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு வார அறிமுகப் பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இது கல்லூரி சூழல், பாடத்திட்டம், தேர்வு முறை…
1 Min Read
அதிமுகவில் முக்கிய பொறுப்புகள்: ராஜலெட்சுமி நியமனம்!
அதிமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக எம்எல்ஏ சுகுமார், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி. சுப்பிரமணியன், கே.சி. பழனிச்சாமி ஆகியோரும், மகளிர் அணி இணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர்…
1 Min Read
502 செவிலியர் பணியிடங்கள் நீக்கம்: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்
தமிழக அரசு 502 செவிலியர் பணியிடங்களை நீக்கியதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிலைப்பை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளார்.
1 Min Read
தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில்…
1 Min Read
