அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்விக்கு பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒரு தரப்பினர் போர்க்கொடி தூக்கினர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கினார். பின்னர், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாய்ப்பளித்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி அணியினர் கடிதம் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பல எம்.எல்.ஏ.க்கள் அதிமுக எடப்பாடி அணிக்கு மீண்டும் திரும்பினர். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவிற்கு செல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை கட்சியில் சேர்ப்பதற்கும் அமைச்சர் பதவி வழங்குவதற்கும் ஆட்சேபம் எழுந்தது. ஆனாலும், கட்சியில் சேர்த்து அவருக்கு எம்.எல்.ஏ. பதவி வழங்கலாம் என்று முதல்வர் விஜய் யோசித்தார். ஆனால், விஜயபாஸ்கர் கட்சிப் பதவி வேண்டும் என்று கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், விஜயபாஸ்கரை திமுக மேலிடம் அணுகியது. விஜயபாஸ்கர் பச்சைக்கொடி காட்டியதை தொடர்ந்து அவர் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திடீர் திருப்பம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.