தங்கம் விலை மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்திற்குப் பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சுமார் ரூ.15,000 வரை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் டாலரின் மதிப்பு வலுவாக இருந்ததுதான். பொதுவாக, டாலரின் மதிப்பு குறையும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடுவத வழக்கம். ஆனால், டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போது, குறுகிய கால லாபத்தை நோக்கமாகக் கொண்டு டாலர்களில் முதலீடு செய்யப்படுகிறது.
சமீப மாதங்களில், போர் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், அதனை ஈடுகட்டும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கியுள்ளன. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தை தவிர்த்து பிற முதலீடுகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700 ஆகவும், ஒரு சவரன் தங்கம் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,09,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மட்டுமல்லாது வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,60,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஜூலை 02) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஜூலை 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.1,09,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.13,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.