நடிகர் கே.பாக்யராஜ் தனது இறுதி யாத்திரையில் ரசிகர்கள் காட்டிய அன்பு, கண்ணீர், கருணை ஆகியவற்றால் தனது ஆன்மா சாந்தியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், "சந்தோஷத்தில மத்தவங்களை அன்புடன் உங்கள் K பாக்யராஜ் பெரிய சந்தோஷம் சந்தோஷப்படுத்திப் பாக்குறது” என்ற தனது வாக்கியத்தை வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக மாற்றிய ரசிகர்களையும், தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் கண்ணுக்குக் கண்ணாக மதிப்பதாய்க் கூறியுள்ளார்.
மேலும், தனது கண்களை மட்டும் ரசிகர்களின் பார்வைக்கு விட்டுச் செல்வதாகவும், அவற்றை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். தனது மகன் சாந்தனுவின் வெற்றிக்கு ரசிகர்களின் கைதட்டல் ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்றும், தனது ஸ்தானத்தில் இனி ரசிகர்களே இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் மறைந்தாலும், ரசிகர்களின் கண்களின் வழியே அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இருக்கிறேன்” – பார்த்தீர்களா? இன்னும் கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் – பார்வையாய்! பிறக்கும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிரஹ பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். எனது இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. நன்றி! நன்றி சொல்வது மனித இயல்பு! நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே. இனி நான்…. நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்! அன்புடன் உங்கள் K.பாக்யராஜ்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.