MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

தமிழ்நாடு

தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முடியாது: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

Admin
Last updated: ஜூலை 2, 2026 6:51 மணி
Admin
Share
SHARE

திமுக – அதிமுக கூட்டணி என்ற ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி, கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்க முடியாது என அதிமுக சட்டமன்ற குழு கொறடா முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற தத்துவத்தை கடைபிடித்தவன் கோயபல்ஸ் என்றும், தமிழக அரசியலில் பல கோயபல்ஸ்கள் வலம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின்பு, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் பல சோதனைகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தபோதும், பலர் இயக்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், இயக்கத்திற்கு சோதனை வரும்போதெல்லாம், 'இனிமேல் அஇஅதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை' என்று தாங்களாகவே முடிவெடுத்து, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுவதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேதனை தெரிவித்தார். இதுநாள்வரை இந்த இயக்கத்தால் அனுபவித்த தங்களுடைய சுகபோக வாழ்விற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரிடம் போய் கையேந்தி நின்றாலும், ஒன்றரை கோடி அஇஅதிமுக தொண்டர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழலில், கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களும், ஒன்றரை கோடித் தொண்டர்களும் நினைக்காத ஒன்றை, திமுக-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றதாக சிலர் பிரச்சாரம் செய்வதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம் சாட்டினார். 'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்று செயல்பட்ட கோயபல்ஸ் என்றோ மறைந்துவிட்டான். ஆனால், அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும். தங்கள் சுயநலத்திற்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டை எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 47 சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அனைவரும் ஒன்றுகூடி கழகப் பொதுச் செயலாளர் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்டோம். அன்றில் இருந்து, 25 பேர் ஒன்றுகூடி மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாள்வரை, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நாம் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்தார் எனக் கூறமுடியுமா? கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்கள் திரும்ப வந்து வருத்தம் தெரிவித்தபோது, கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்திய பழி தவறு என்று உணரவில்லையா? இப்போது, தங்களின் நல்வாழ்விற்காக சொன்ன ஒரே பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழவைத்த இந்த இயக்கத்திற்கு விசுவாசமில்லாமல், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்கு தமிழக மக்களும், கழகத் தோழர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKPoliticsTamil Naduஅக்ரி கிருஷ்ணமூர்த்திஅதிமுகஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு
Next Article சென்னை பேருந்து ஊழியர்கள்: வலிப்பு ஏற்பட்ட பெண்ணின் உயிரைக் காத்த நாயகர்கள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சிவன் கோவிலில் விபத்து நடந்த இடம்

பீகார் சிவன் கோவிலில் சோகம்: மின்கம்பி அறுந்து 7 பேர் பலி

பீகார் லக்கிசராய் அசோக் தாம் சிவன் கோவிலில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட…

ஆகஸ்ட் 17, 2026

திருப்பதியில் 22 மணிநேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம்…

ஆகஸ்ட் 17, 2026

அயோத்தி ராமர் கோயில்: அர்ச்சகர்களுக்கு புதிய உடை விதிமுறை அமல்

அயோத்தி ராமர் கோயிலில் அர்ச்சகர்களுக்கான புதிய உடை…

ஆகஸ்ட் 17, 2026

ராகுல் காந்தி சொத்து குவிப்பு வழக்கு: இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான சொத்து…

ஆகஸ்ட் 17, 2026

புதிய இளைஞர் இயக்கம் உதயம்: சமூக மாற்றத்திற்கு களம் இறங்கும் புதிய தலைமுறை

சமூக மாற்றத்திற்காக ஒரு புதிய இளைஞர் இயக்கம்…

ஆகஸ்ட் 17, 2026

You Might Also Like

அரசியல்

திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!

திமுக இளைஞரணி காங்கிரஸ் மீது விமர்சனம் முன்வைத்த நிலையில், அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி கொடுத்து, 'வரம்பு மீறினால் கடும் விளைவுகள்' என எச்சரித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு: 9 ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைப்பு!

நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு தெற்கு ரயில்வேயால் ஒரு நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளில் 9 முக்கிய ரயில் நிலையங்களில் சிறப்பு உதவி மையங்கள்…

1 Min Read
வியட்நாமில் படகு விபத்து - மீட்புப் பணிகள்
தமிழ்நாடு

வியட்நாம் படகு விபத்து: 8 தமிழர்கள் உயிரிழப்பு – தமிழக அரசு உதவி எண்கள் அறிவிப்பு

வியட்நாமில் படகு விபத்தில் 8 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

திமுக-அதிமுக கூட்டணி முயற்சி? ரஜினிகாந்த் விளக்கம்!

திமுக-அதிமுக கூட்டணி முயற்சி குறித்த வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்றியைப் பாராட்டிய அவர், யாரும் கற்பனை செய்ய முடியாத சாதனைகளை ஸ்டாலின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?