MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு
தமிழ்நாடு

முதல்வரை நெருங்கவிடாமல் உளவுத்துறை ரிப்போர்ட்: அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் அதிரடி முடிவு

Admin
Last updated: July 2, 2026 4:42 pm
Admin
Share
SHARE

புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், உளவுத்துறையின் ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றி வந்த அவரை, உளவுத்துறையில் நியமித்தது த.வெ.க. அரசு. இந்த நியமனம், அறிந்த அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. எதிர்பார்த்தபடியே, மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தி, உளவுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அஸ்ரா கார்க் கொண்டுவந்தார்.

மேலும், சில அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்து, அவர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர்களின் புரோட்டோகாலை மீறும் சில அதிகாரிகளால், பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பமடைந்து, பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும், அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தும், அது கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த விஷயங்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, அது நேரடியாக முதல்வரை சென்றடையவில்லை. அரசின் அத்தியாவசியமான ரகசியங்களைக்கூட முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசுக்கு தொடர்பில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசுக்குள் இருப்பதாக அவர் உணர்ந்தார். இந்த சூழலில் எப்படி பணி செய்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உளவுத்துறைக்கும் முதல்வருக்கும் இடையேயான இந்த இடைவெளி அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. உளவுத்துறையின் குறிப்புகள் முதல்வருக்கு நேரடியாக செல்வதில்லை. அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பெயரை பயன்படுத்தி செயல்படும் நபர்கள் பற்றியும் அறிக்கைகளில் எழுதப்பட்டிருந்தாலும், அவை அரசிற்கு தொடர்பில்லாத நபர்களால் பிரிக்கப்பட்டு, அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலை நீடித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என அஞ்சிய அஸ்ரா கார்க், மத்திய அரசு பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asra Garg IPSஅஸ்ரா கார்க்உளவுத்துறைஐ.பி.எஸ்த.வெ.க அரசுதமிழ்நாடு காவல்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
Next Article ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மணிப்பூர் வேதனை: பிரதமர் அனுதாபம் காட்டவில்லை – ராகுல் காந்தி

மணிப்பூர் மக்கள் தாங்க முடியாத துயரங்களை அனுபவித்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து…

July 2, 2026

தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில்,…

July 2, 2026

ஜனாதிபதி மாளிகையில் ஜப்பான் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த…

July 2, 2026

இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்…

July 2, 2026

திருமண நாள் கொண்டாடிய 2 நாட்களில் இளம்பெண் தற்கொலை: கணவன் கைது

திருமண நாளைக் கொண்டாடிய 2 நாட்களிலேயே, கணவனின்…

July 2, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடியாது என ஐ.யூ.எம்.எல். கட்சி அறிவிப்பு. தி.மு.க. உடன் தான் இருப்போம், அக்கூட்டணியில் இருந்து வர மாட்டோம் என்றும் திட்டவட்டம்...

0 Min Read
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் விளம்பரக் கூடங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தவெகவினர் அரசுப் பள்ளிகளை நாடக மேடையாக்கி படப்பிடிப்பு நடத்துவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை

கோவில்பட்டி அம்மா உணவகத்தில் பார்சல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்கு பார்சல் வாங்கி செல்வதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி!

திண்டுக்கல் அருகே வீட்டில் மின் பழுதை சரிசெய்ய முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?