MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; தயாராக இருங்கள் – மு.க.ஸ்டாலின்

Admin
Last updated: June 29, 2026 6:34 am
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் 5,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். சென்னை வானகரத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் இணைப்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய உறுப்பினர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'ஆறு முறை ஆட்சி புரிந்த, நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞர் 50 ஆண்டுகள் தாங்கி பிடித்த இயக்கத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலில் உதயசூரியன் சின்னத்தில்தான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பிறகும், சட்டமன்றத்தில் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு பேசிய உறுப்பினரை கண்டித்து, 'எனக்கு தலைவர் கலைஞர்' என்று எம்ஜிஆர் கூறியது வரலாறு. நான் சாதாரண இளைஞனாக இருந்தபோது, நாடகம் பார்க்க வந்த எம்ஜிஆர் தரையில் அமர்ந்து பார்த்தார். இன்று அதே இயக்கத்தில் தலைமை தொண்டனாக உங்களை வரவேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளேன்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், உண்மையாக உழைத்தவர் என்றும், சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் பேசக்கூடியவர் என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். 'எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவில் நீங்கள் பதவிக்காக, பவுசுக்காக இல்லாமல் கொள்கைக்காக இணைந்துள்ளீர்கள். திமுக வலுவாக இருந்தால்தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என நீங்கள் இணைந்திருக்கிறீர்கள். கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக உயர்ந்தது. தினமும் ஒரு திட்டம் என்ற அடிப்படையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உலக அளவில் பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வந்தன. வேலைவாய்ப்புகள் பெருகின. ஆனால், தற்போது ஆட்சி மாற்றத்தால் தமிழ்நாடு அகல பாதாளத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், கொள்ளை, பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அமைச்சர்களே சம்பந்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம் என மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அமைச்சர்களை நோக்கி மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்குகின்றன. உலகின் பல நாடுகள், தமிழ்நாட்டின் காலை உணவுத் திட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளன. லண்டன் மாநகரிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. 'தமிழ்நாடு' என பேரறிஞர் அண்ணா வைத்த பெயர் உள்ளவரை அவரது பெயர் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திமுகவின் மக்கள் நலத்திட்டங்கள் உள்ளவரை மு.க.ஸ்டாலின் பெயர் நிலைத்து நிற்கும். தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம்; மூன்று மாதங்களில் கூட வரலாம், ஆறு மாதங்களுக்குப் பிறகும் வரலாம். பெரும்பான்மைக்கு 118 இடங்கள் வேண்டும். தவெக 108 இடங்களில்தான் வென்றன. திமுக வெற்றி பெற வேண்டும்; ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் வாக்களித்த கட்சியினரின் ஆதரவில்தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். இந்த நிமிடத்திலிருந்து திமுகவின் வெற்றிக்காக உழைக்க தயாராக இருங்கள். உங்களுக்கான அடையாளம் உங்களைத் தேடி வரும்' என்று மு.க.ஸ்டாலின் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு, வெள்ளி வீர வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKதமிழக அரசியல்தேர்தல்மு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்
Next Article தங்கம் வாங்காதவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

June 29, 2026

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் ஏற்கனவே சிரமப்படும்…

1 Min Read
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகையும் தெலுங்கானா முன்னாள் அமைச்சருமான ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார். அவர் சிறப்பு அபிஷேகத்திலும் கலந்துகொண்டார்.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின்…

1 Min Read
தமிழ்நாடு

எ.வ.வேலு வழக்கு: வானதி சீனிவாசன் கருத்து – நல்லாட்சியின் அடையாளம்

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?