சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
விஜய் சங்கர் ஓய்வு: ‘3டி வீரர்’ கண்ணீருடன் விடைபெறுகிறார்!
இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு '3டி வீரர்' முற்றுப்புள்ளி.
2 Min Read
சிவகங்கை த.வெ.க நிர்வாகி வெட்டிக்கொலை: இருவர் கைது
சிவகங்கை அருகே டாஸ்மாக் கடை அருகே த.வெ.க கிளை செயலாளர் நவீன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 Min Read
த.வெ.க.வுக்கு வி.சி.க. ஆதரவு: கடிதத்தை காட்டினார் ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற…
1 Min Read
8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (மே 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…
2 Min Read