சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் ஊழல் நடப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் விஜய்க்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 Min Read
ஆட்சிக் கவிழ்ப்பு பயம்: குழந்தைகளை குறிவைக்கிறீர்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசுப் பள்ளிகளில் கட்சி நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்புவது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது மாணவர்களின் கல்வியை…
2 Min Read
முதல்வர் விஜய் இன்று கரூர் வருகை: அரசு பணி ஆணைகள் வழங்கல்
தமிழக முதல்வர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்து, கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணைகளை வழங்க உள்ளார். மேலும், 10 கி.மீ. தொலைவுக்கு…
1 Min Read
கும்பகோணம் தீ விபத்து: 22-ஆம் ஆண்டு நினைவு தினம் – 94 மோட்ச தீபங்கள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, 94 மோட்ச தீபங்கள் ஏற்றப்பட உள்ளன. பெற்றோர்கள்…
2 Min Read
