சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்!
தமிழக முதல்வர் விஜய், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக உரையாடினார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது இந்த…
1 Min Read
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Min Read
திமுக இளைஞரணிக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கை!
திமுக இளைஞரணி காங்கிரஸ் மீது விமர்சனம் முன்வைத்த நிலையில், அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி கொடுத்து, 'வரம்பு மீறினால் கடும் விளைவுகள்' என எச்சரித்துள்ளார்.
1 Min Read
மேகதாது அணைக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு மனு
மேகதாது அணை திட்டத்திற்கு தடை கோரி, தமிழக அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
1 Min Read