சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை
அரசு பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 Min Read
முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு, மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக குடியரசுத் தலைவர் திரவுபதி…
1 Min Read
ராஜபாளையம் – கொருக்காம்பட்டி புதிய பேருந்து சேவை: அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் தவித்துவந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து கொருக்காம்பட்டி…
2 Min Read
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லை: வீரபாண்டியன் விமர்சனம்
தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என பாமக சட்டமன்ற உறுப்பினர் மு. வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
1 Min Read

