சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் மற்றும் திறந்தவெளி கலையரங்கில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி முற்றிலும் தவறானது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'கலையரங்கம், நூல் வெளியீட்டுக்கூடம், மாநாட்டுக்கூடம் மற்றும் திறந்தவெளியரங்கம் ஆகியவற்றின் வாடகைக் கட்டணத்தில், இன்றைய தேதி வரை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. எந்தக் கட்டணமும் உயர்த்தப்படவில்லை' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு முன்னர், த.வெ.க அரசு மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி, ரூ. 5 லட்சமாக உயர்த்தியதாகவும், இதற்குப் பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் கலைஞர் செய்திகள் பதிவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனத் தற்போது தெரியவந்துள்ளது. திமுக அரசு, தவெக அரசு மீது வீண் பழி சுமத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
You Might Also Like
விருதுநகரில் தனியார் பஸ் விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்
விருதுநகரில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆறுதல் கூறினார்.
1 Min Read
கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு அரசு வேலை – விஜய் வழங்குகிறார் பணி ஆணை
கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படவுள்ளது. முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் சென்று பணி…
1 Min Read
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு, நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார்…
1 Min Read
சென்னையில் நடுவானில் இன்ஜின் கோளாறு: இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
சென்னையில் நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 229 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம், மீண்டும் பறக்க தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டது. DGCA விசாரணைக்கு…
2 Min Read
