MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை: ரோஹித்-பிரசித் ஹாட்ரிக் சாதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > 1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை: ரோஹித்-பிரசித் ஹாட்ரிக் சாதனை
விளையாட்டு

1078 ஒருநாள் போட்டிகளில் முதல் முறை: ரோஹித்-பிரசித் ஹாட்ரிக் சாதனை

Admin
Last updated: June 20, 2026 8:45 pm
Admin
Share
SHARE

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் இணைந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அரிய சாதனையைப் படைத்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், இன்னிங்ஸின் தனது முதல் ஓவரிலேயே பிரசித் கிருஷ்ணா விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஃபார்மில் இருக்கும் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸை 5 ரன்களில் அவர் ஆட்டமிழக்கச் செய்ய, விக்கெட் கீப்பருக்கு அருகில் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் சர்மா அந்தச் சிறப்பான கேட்ச்சை பிடித்தார்.

குர்பாஸ் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை தட்டிவிட முயன்றபோது, பந்து பேட்டின் outside edgeல் பட்டு நேராக ரோஹித்திடம் சென்றது. இது இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தனது துல்லியமான பந்துவீச்சு மற்றும் லைன் லெங்த் மூலம் ஆப்கானிஸ்தான் பேட்டர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார் பிரசித். ஆறாவது ஓவரில், அவர் மீண்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இந்த முறை ரஹ்மத் ஷாவை 5 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். அப்போதும் ரோஹித் சர்மாவே அந்த கேட்ச்சை நேர்த்தியாகப் பிடித்தார்.

எட்டாவது ஓவரில் பிரசித்-ரோஹித் கூட்டணி கேட்ச்களில் ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தது. இப்ராஹிம் சத்ரான் இவர்களின் மூன்றாவது இரையானார். அவர் பந்தை உடலுக்கு வெளியே தட்டிவிட முயன்றபோது, பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் சென்றது. அங்கு ரோஹித் இந்த இன்னிங்ஸின் தனது மூன்றாவது கேட்ச்சை வெற்றிகரமாகப் பிடித்தார். இந்த மூன்று விக்கெட்டுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறையில் வீழ்ந்தன. பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துகள் பேட்டின் விளிம்பில் பட, ஸ்லிப் திசையில் நின்ற ரோஹித் சர்மா மீதமுள்ள வேலையைச் சரியாகச் செய்து முடித்தார்.

இந்த அசத்தலான கூட்டணி இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்துள்ளது. இந்தியா விளையாடியுள்ள 1,078 ஒருநாள் போட்டிகளில், ஒரு இன்னிங்ஸின் ஆரம்பத்திலேயெ முதல் மூன்று விக்கெட்டுகளையும் ஒரே பந்துவீச்சாளர் மற்றும் ஃபீல்டர் கூட்டணி வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இந்திய அணியின் ஃபீல்டர் ஒருவர் ஒரே பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் மூன்று கேட்ச்கள் எடுத்த நிகழ்வுகள் நடந்திருந்தாலும், இன்னிங்ஸின் தொடர்ச்சியான முதல் மூன்று விக்கெட்டுகளும் இவ்வாறு வீழ்ந்தது கிடையாது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ஆப்கானிஸ்தான்இந்தியாஒருநாள் போட்டிகிரிக்கெட்பிரசித் கிருஷ்ணாரோஹித் சர்மா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விராட் கோலி உடற்தகுதி சோதனை: ஹர்திக் பாண்ட்யா விலகல்
Next Article சூர்யா 47: மோகன்லால் சர்ச்சை வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜித்து மாதவன்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

நீட் தேர்வை மீண்டும் எழுதும் மாணவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து…

June 20, 2026

மகாராஷ்டிரா அனுமன் கோவில் இடிந்து 6 பேர் பலி: 40 பேர் காயம்

மகாராஷ்டிரா பர்பானி அனுமன் கோவிலில் பஜனை நேரத்தில்…

June 20, 2026

தேனிலவு சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் விசாரணை

குருகிராமில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த ராதா…

June 20, 2026

தொண்டர்கள் விரும்பினால் பதவி விலக தயார் – உத்தவ் தாக்கரே

சிவசேனா கட்சி தொண்டர்களுக்கு என் மீது நம்பிக்கை…

June 20, 2026

நீட் தேர்வு நாளை: மாணவர்கள் மறக்கக்கூடாத ஆவணங்கள்!

நாளை நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் கொண்டு…

June 20, 2026

You Might Also Like

விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு

இந்திய துப்பாக்கி சுடும் வீரரும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவருமான ரந்தீர் சிங் (79) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு…

1 Min Read
விளையாட்டு

விராட் கோலி விக்கெட்டை எடுத்த பிரின்ஸ் யாதவ்: இந்திய அணியில் வாய்ப்பு?

விராட் கோலி விக்கெட்டை எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர் பிரின்ஸ் யாதவ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

1 Min Read
விளையாட்டு

சிஎஸ்கேவில் மாற்றம் அவசியம்: சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், கேப்டன்சி பொறுப்பில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை விடுவிக்க வேண்டும் என்றும், ஸ்டீபன்…

3 Min Read
விளையாட்டு

IPL 2026: காதலிகளால் கசியும் ரகசியங்கள்.. அத்துமீறும் வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ ‘செக்’

மும்பை: 2026 ஐபிஎல் தொடர் ஒருபுறம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் மைதானத்திற்கு வெளியே நடக்கும் சில சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?