கர்நாடக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் தனித்தீர்மானத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியதற்கு எம்பி கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மதிக்காமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட முயல்கிறது. இதற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் தம்பி விஜய் அவர்கள் தனித்தீர்மானத்தை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றியது பாராட்டுக்குரியது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'தமிழ்நாட்டின் நீர் உரிமையையும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மேகதாது விவகாரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு அனைவரும் ஓரணியாக நின்று ஒருமித்த குரலாக ஒலித்த தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தம்பி விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றியது, காவிரி நீர் உரிமை விவகாரத்தில் தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.