முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெறும் 'சன்' ஆதன சிம்மாசனத்தில் வாரிசு தலைவர் உதயநிதி சரிந்து கிடக்கிறார் என அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈ.வெ.ரா, அண்ணாதுரையை கேடயமாக பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன் என, ஒரு குடும்பம் மட்டுமே ஊறித்திளைக்கும் 'சன்' ஆதன சிம்மாசனத்தில், வாரிசு தலைவர் உதயநிதி சரிந்து கிடக்கிறார்.
அதிகாரத்தை பரவலாக்கும், அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோபாக்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்காது. நான்கு, ஐந்து பேர் மட்டுமல்ல, முதல்வர் விஜய் தலைமையில், ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோபா இது. சனாதன சிம்மாசனங்களுக்கு, ஜனநாயக சோபாக்கள் பற்றி பேச அருகதையோ, யோக்கியதையோ கிடையாது.
கடந்த மே 4 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி, முதல்வர் விஜய் தலைமையில், அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கும் ஜனநாயக சோபா மட்டுமே நீடிக்கும். எனவே, சனாதன சிம்மாசனங்களுக்கு, ஜனநாயக சோபாக்கள் பற்றி பேச அருகதையோ, யோக்கியதையோ கிடையாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் தகுதி மற்றும் யோக்கியதை குறித்து அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயக சோபாக்களின் முக்கியத்துவத்தையும், அதிகாரப் பகிர்வையும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.