MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிசிசிஐ அதிரடி: திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு அபராதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > பிசிசிஐ அதிரடி: திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு அபராதம்
விளையாட்டு

பிசிசிஐ அதிரடி: திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷிக்கு அபராதம்

Admin
Last updated: June 18, 2026 7:45 am
Admin
Share
SHARE

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மா மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு பிசிசிஐ அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தம்புள்ளாவில் கடந்த ஜூன் 15 அன்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில், இலங்கை ஏ அணி சூப்பர் ஓவர் முடிவில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கும் போது, இலங்கை வீரர் வீசென் ஹாலம்பகே, 'வீட்டுக்குப் போ, இது ஐபிஎல் கிடையாது' என்று வைபவ் சூர்யவன்ஷியை வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த 15 வயது வைபவ், ஹாலம்பகேவின் நெஞ்சில் தள்ளி மோதலில் ஈடுபட்டார். இந்த ஒழுங்கீன செயலை விசாரித்த போட்டி நடுவர் பிரதீப் ஜெயபிரகாஷ் அளித்த பரிந்துரையின்படி, வைபவ் சூர்யவன்ஷிக்கு அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதத்தை அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது. அதேபோல, வம்புக்கு இழுத்த இலங்கை வீரர் ஹாலம்பகேவுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் 50 சதவீத அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையே, மைதானத்தில் நடுவர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய ஏ அணியின் கேப்டன் திலக் வர்மாவுக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. சூப்பர் ஓவர் நடத்துவது, நோ-பால் சர்ச்சை மற்றும் போதிய வெளிச்சமின்மை ஆகிய விவகாரங்களில் திலக் வர்மா கள நடுவர்களிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். இதன் காரணமாக அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக பிசிசிஐ விதித்துள்ளது. மேலும், சண்டையைத் தடுத்து நிறுத்திய இலங்கை விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் 20 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஏ அணிகள் விளையாடும் போட்டிகளில் ஐசிசி நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காது என்பதால், அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களே இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது குறித்து பிசிசிஐ தரப்பில் கூறுகையில், 'இந்திய ஏ அணி ஒரு முக்கியமான முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. மூத்த அணியில் இடம்பிடிக்கத் துடிக்கும் இளம் வீரர்கள், இது போன்ற தேவையற்ற சர்ச்சைகளில் கவனம் செலுத்தாமல் தங்களது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:BCCICricketகிரிக்கெட்திலக் வர்மாபிசிசிஐவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உதயநிதிக்கு அருகதை இல்லை – அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம்
Next Article தனுஷின் மூத்த மகன் யாத்ரா ஹீரோவாகிறார்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர் பாதிப்பு: 18 குழந்தைகள் உட்பட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதி

தெலுங்கானாவில் பானிபூரி சாப்பிட்ட 24 பேர், இதில் 18 குழந்தைகள், வயிற்று வலி,…

June 18, 2026

இமாசல பிரதேசத்தில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் சொகுசு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து…

June 18, 2026

கேரளாவில் ஷிகெல்லா தொற்று: 6வது உயிரிழப்பு, அச்சத்தில் மக்கள்

கேரளாவில் ஷிகெல்லா தொற்று பாதிப்பு அதிகரித்து, 6வது…

June 18, 2026

நீட் மறுதேர்வு: மன அழுத்தத்தால் 4 மாணவர்கள் தற்கொலை – அதிர்ச்சி

நீட் மறுதேர்வு நெருங்கும் வேளையில், தேர்வு ரத்து…

June 18, 2026

ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அஞ்சலி

ஜான்சி ராணி லட்சுமி பாயின் வீரவணக்க நாளில்,…

June 18, 2026

You Might Also Like

விளையாட்டு

ஐபிஎல் 2026: ரசிகர்கள் அத்துமீறல்.. சியர் லீடர்கள் பாதுகாப்பு.. காவலர்கள் அதிரடி!

2026 ஐபிஎல் தொடரில் லக்னோவில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், சியர் லீடர்களிடம் ரசிகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட…

2 Min Read
விளையாட்டு

2027 உலகக்கோப்பை: ரோஹித், கோலி ஆட்டம் அணி நிர்வாகம் கையில் – அஸ்வின்

2027 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவது அணி நிர்வாகத்தின் கைகளில் உள்ளது என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

தீபாவளியில் ஐபிஎல்? பிசிசிஐயின் அதிரடி ஆலோசனை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கோடை காலத்திலிருந்து செப்டம்பர் - அக்டோபர் மாதங்களுக்கு மாற்ற பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. தீபாவளிக்கு முந்தைய இந்த காலம் விளம்பரதாரர்களுக்கு சாதகமாக இருக்கும்…

1 Min Read
விளையாட்டு

15 வயது வைபவ் சூர்யவன்ஷி: ஐபிஎல் சிக்ஸர் சாதனையை முறியடித்த இளம் வீரர்!

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 சீசனில் ஒரு இந்திய பேட்டர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?