சென்னையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமி, முட்புதரில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது, அந்தக் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.