சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு கட்சியினர் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் என்.ஆனந்த் உரையாற்றினார். அப்போது அவர், 'லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; ஊழல் செய்ய மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம். ஊழல் செய்தால் அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும். ஊழல் செய்தால் அடுத்த விநாடியே எங்கள் மீது முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துவிடுவார்' என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், 'ஆகவே நாங்கள் எக்காரணத்தை கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம்; ஊழல் செய்யவும் வரவில்லை; மக்களுக்கு சேவை செய்வது தான் எங்களது நோக்கமாக இருக்கும். நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நாங்கள் செய்ய போகிறோம்' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோரும் இன்றைக்கு கட்சியில் வந்து சேருகிறார்கள். தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக செய்து கொடுப்பார்கள். மாற்று கட்சியில் இருந்து வந்தாலும் தவெகவில் உரிய மரியாதை கொடுக்கப்படும்' என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்தனர். அமைச்சர் என்.ஆனந்த் அவர்களை வரவேற்று, கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும் என்றும், மக்களின் தேவைகளை நிறைவேற்ற தவெக அரசு பாடுபடும் என்றும் உறுதியளித்தார். பஞ்சாயத்து தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.