MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
தமிழ்நாடு

69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

Admin
Last updated: May 28, 2026 1:35 pm
Admin
Share
SHARE

சென்னை: தமிழகத்தில் பல தசாப்தங்களாக பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனை உறுதி செய்து வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை தற்போது உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது சமூக நீதி கட்டமைப்பையே அசைத்துப் பார்க்கும் நோக்கில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு தீவிரமாக கையாண்டு, மக்களின் உரிமைகளை சமரசமின்றி பாதுகாக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதாரண சலுகை அல்ல. இது சமூக நீதிப் போராளிகளின் தொடர் போராட்டங்களாலும், மக்களின் தியாகங்களாலும் வென்றெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமிதம் மிக்க உரிமையாகும். 1992-ல் உச்ச நீதிமன்றம் 50% வரம்பு விதித்தபோதும், தமிழகத்தின் தனித்துவமான சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டு, 1993-ல் தனிச் சட்டம் இயற்றி, இந்திய அரசியலமைப்பின் 9-வது அட்டவணையில் இணைத்து பாதுகாப்பு பெறப்பட்டது. இந்த சட்டப் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான அச்சுறுத்தலாகும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் இந்த முக்கிய வழக்கில், தமிழக அரசு தனது வாதங்களை மிக வலுவாக முன்வைக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சமூக, பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்த துல்லியமான, அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்களைத் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அனைத்து சமூக நீதி அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து மாநில அரசு தனது நிலைப்பாட்டை உணர்த்த வேண்டும்.

முதல்வர் இதுகுறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், வெறும் ஆலோசனைகளோடு நின்றுவிடாமல், களத்தில் மக்களின் பிரதிநிதியாக தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டு வரம்பில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது தமிழகத்தின் அமைதிக்கும், சமத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, 69 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் துளியும் வீரியம் குறையாமல் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கேட்டுக்கொள்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:69% இடஒதுக்கீடுSDPISupreme CourtTamil Nadu Reservationசமூக நீதிதமிழக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!
Next Article மனித நேயம் தழைக்க பாடுபடுவோம் – எடப்பாடி பழனிசாமி பக்ரீத் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் வாகன தணிக்கையின் போது 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஏரியில் 20 டன் மீன்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எல்லுகுட்டை ஏரியில் வெயில் தாக்கம் காரணமாக ஆக்சிஜன் குறைந்து 20 டன் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி…

1 Min Read
தமிழ்நாடு

கணிதத் தேர்வில் தோல்வி: மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

திருப்பூர் அருகே பிளஸ்-2 கணிதத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?