தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும், விவசாயிகள் தங்கள் அரசைப் புரிந்து கொள்வார்கள் என்றும் முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், 'எல் நினோவின் காரணமாக இந்த ஆண்டு பருவமழை குறைவாகவே இருக்கும். எல்நினோ வெப்ப அலையால் மழை குறைவு என்பதை விவசாயிகள் நன்று அறிவர். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த தவேக அரசு செய்யும். இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்கள் நிதி நெருக்கடியை விட்டுபோய் இருந்தாலும், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நலனுக்காக தவெக அரசு சின்சியராகவும், முழு வீச்சிலும் தொடர்ந்து உழைக்கும்' என்று தெரிவித்தார்.
ஆனால், உண்மையில் இந்த எல்நினோ பாதிப்பு அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மத்திய அரசு வகைப்படுத்தவில்லை. டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் மேற்கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பிரச்சனைகள் இருக்கலாம் என்று மட்டுமே மத்திய அரசு வகைப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உரை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.