MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

அரசியல்

ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

Admin
Last updated: மே 28, 2026 10:05 காலை
Admin
Share
SHARE

திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், தனது வளர்ப்புத் தாயார் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களான சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆகியோர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரு காவலர்களும் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்காமல் தாமதம் செய்வதாகக் கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பாலியல் வழக்குகளில் விரைந்து நீதி வழங்கும் வகையில் நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும், மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிகளவில் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 22-க்கு தள்ளிவைத்தனர். அதேநேரம், திருவண்ணாமலை மகளிர் நீதிமன்ற நீதிபதி தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரித்து, ஜூலை 31-க்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Andhra PradeshTamil Naduசென்னை உயர் நீதிமன்றம்திருவண்ணாமலைபாலியல் வன்கொடுமைபோலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Next Article கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவர்களை தேடும் பணி

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்கும்…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550…

ஜூலை 5, 2026

You Might Also Like

அரசியல்

தவெக அரசின் அதிரடி: முதல் மாத நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் விளக்கம்

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு, பூஜ்ஜிய ஊழல், மின்வெட்டு என பல…

2 Min Read
அரசியல்

நிலக்கரி இறக்குமதி மோசடி: அகமது புகாரி வழக்குடன் 4 நிறுவனங்கள் மீதான வழக்கும் ரத்து!

நிலக்கரி இறக்குமதி மோசடி வழக்கில் தொழிலதிபர் அகமது புகாரிக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய 4 நிறுவனங்கள் மீதான வழக்குகளையும் சென்னை சிபிஐ…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

5 தொகுதி இடைத்தேர்தல்: ஆகஸ்டில் ஓட்டுப்பதிவு?

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் (ஜூலை) இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம்…

1 Min Read
அரசியல்

சென்னையில் இரவு நேர மின்வெட்டு: மக்கள் கடும் அவதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் தொடர் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் முறையான பதில் கிடைக்காததால் மக்கள் போராட்டத்தில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?