MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்
அரசியல்

குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்

Admin
Last updated: May 27, 2026 7:32 pm
Admin
Share
SHARE

கட்டுமான நிறுவன உரிமையாளருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெளிவுபடுத்துவதற்காகவே, ஐபிஎஸ் அதிகாரி அருணை நேரில் ஆஜராகும்படி சென்னை உயர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதாக விளக்கமளித்துள்ளது.

சென்னை கொளத்தூரில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, அதில் 78 குடியிருப்புகளை வழங்கியதில் முறைகேடு செய்ததாக கூறி, கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குண்டர் சட்ட உத்தரவு குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், அதை பிறப்பித்த அப்போதைய சென்னை மாநகர காவல் துறை ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான ஏ.அருணை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆணையர் அருண், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன் ஆஜரானார். நீதிமன்றத்தின் சம்மனை வழங்கச் சென்ற அதிகாரியை இரண்டு மணி நேரம் காக்க வைத்த ஊழியர் குறித்தும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பது குறித்தும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், நீதிமன்ற ஊழியரை காக்க வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், அருண் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்ததால் அவர் வருவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தனது 28 ஆண்டு கால அனுபவத்தில் தன் மீது எந்த புகாரும் இல்லை என்றும், சில சமூக ஊடகங்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவதாகவும் அருண் தெரிவித்தார். மேலும், சந்தோஷ் சர்மா போலி கையெழுத்து மூலம் தொடர் மோசடிகளில் ஈடுபட்டதாலேயே அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததாகவும் அவர் கூறினார். சந்தோஷ் சர்மாவை குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெரிவிப்பதற்காகவே அருணை ஆஜராக உத்தரவிட்டதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். சந்தோஷ் சர்மாவின் 4 வார ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:அருண்ஐபிஎஸ் அதிகாரிகுண்டர் சட்டம்சந்தோஷ் சர்மாசென்னை உயர் நீதிமன்றம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்
Next Article விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடமில்லை: வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழக அமைச்சரவையில் இடம் இல்லை என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அரசுக்கு ஆதரவு…

1 Min Read
அரசியல்

பட்டாசுத் தொழில் பாதுகாப்பு: வல்லுநர் குழு விரைவில் – அமைச்சர் கீர்த்தனா

பட்டாசுத் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ள வல்லுநர் குழு விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அவர்…

1 Min Read
அரசியல்

திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் எப்போது?

முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததை அடுத்து, திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பருக்குள் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
அரசியல்

ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இலவச லட்டு பிரசாத விற்பனையில் ரூ.3.40 கோடி மோசடி நடந்ததை அடுத்து 6 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?