MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு
அரசியல்

சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

Admin
Last updated: May 26, 2026 11:12 am
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் கார் மூழ்கியதில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சின்னத்திருப்பதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (73), ராதா (63) ஆகியோர்தான் உயிரிழந்த தம்பதி ஆவர்.

நேற்று முன்தினம் இரவு ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டி, ஏனாதி கிராமம் வழியாகச் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல மழைநீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வெங்கடாசலம், ராதா ஆகியோர் காரில் சென்றபோது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் காரை கடக்க முயன்றனர். அப்போது, கார் மழைநீரில் மூழ்கி லாக் ஆனதால், தம்பதியினர் வெளியேற முடியாமல் உயிரிழந்தனர்.

மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், சுரங்கப்பாதையில் கார் மூழ்கியிருப்பதைக் கண்டு ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை வெளியே எடுத்தபோது, தம்பதியினர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதைகளில் மழைக்காலங்களில் நீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை மோட்டார் பம்ப் மூலம் மழைநீரை வெளியேற்றுவதன் மூலம் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஓடையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சிறுவன் கார்த்திக் (6) உயிரிழந்த சோக சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Newsஉயிரிழப்புசேலம்மழைநீர்விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead1
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 10 நாட்களில் மாற்றங்கள் சாத்தியமா? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுங்கள்: குஷ்பு
Next Article மேகேதாட்டு அணை: அரசியல், சட்ட ரீதியாக அழுத்தம் தேவை – தலைவர்கள் வலியுறுத்தல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

அரசியல்

நீட் தேர்வு ரத்து: திமுக, விசிக, இடசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

1 Min Read
தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

மதுரை பரவை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. பிரமுகர் கண்ணன் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார்…

1 Min Read
அரசியல்

கோவை சிறுமி கொலை: முதல்வர் ஸ்டாலின் ஆறுதல், ரூ.7 லட்சம் நிதியுதவி

கோவை சிறுமி கொலை சம்பவத்தில், முதல்வர் விஜய் தொலைபேசி மூலம் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்கினார். அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

2 Min Read
அரசியல்

போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?