MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை
க்ரைம்

மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை

Admin
Last updated: May 26, 2026 8:14 am
Admin
Share
SHARE

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே, சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்தத்தில் குபேந்திரன் என்ற 17 வயது சிறுவன் நின்றுகொண்டிருந்தான். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதுகுறித்து விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

விசாரணையில், கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது, சிறுவன் குபேந்திரனுக்கும், முத்துமணி என்ற தொத்தல் முத்துமணி என்பவருக்கும் இடையே வடக்குமாசி வீதி அருகிலுள்ள கழிப்பறையில் மோதல் ஏற்பட்டதும், அதில் முத்துமணி காயமடைந்ததும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தின் காரணமாகவே, ஆத்திரமடைந்த முத்துமணி, குபேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், முத்துமணி, அவரது தம்பி ராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் குபேந்திரனை வெட்டி கொலை செய்தது.

இதுதொடர்பாக விளக்குத்தூண் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திடீர் நகரைச் சேர்ந்த முத்துமணி, அவரது தம்பி ராஜ், முத்துகுமார், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வடக்குமாசி வீதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கொலையான குபேந்திரன் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைகாரர்களை விரைந்து கைது செய்த காவல்துறையினரை காவல் ஆணையர் அபிஷேக் தீட்சித் பாராட்டினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Crimeகொலைசித்திரை திருவிழாமதுரைமதுரை செய்திகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விவசாயிகள் நலன்: ராமதாஸின் கோரிக்கைகள்
Next Article ஐபிஎல் குவாலிபையர் 1: இறுதிப்போட்டிக்கு முன்னேற RCB vs GT மோதல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

தூத்துக்குடியில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் வெளிநாட்டில் இருக்கும்போதே மனைவியே கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மனைவி கைது…

2 Min Read
க்ரைம்

சென்னை | ரூ.65 லட்சம் பணத்துடன் தப்பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்கையுடன் கைது

சென்னை: ரூ.65 லட்​சம் பணத்​துடன் தப்​பிச் சென்ற தங்க நகைக்கடை ஊழியர் திருநங்​கை​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர் பேரக்ஸ் ரோடு பகு​தி​யில் வசித்து வருபவர் நிகல்​சந்த்…

1 Min Read
க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருடு போனது. இது தொடர்பாக மருமகன் தட்​சிணா​மூர்த்​தி,…

1 Min Read
க்ரைம்

லஞ்சம் வாங்கியதாக பொறியாளர் கைது

சிவகங்கை: சிவகங்​கை​யில் ரூ.1 லட்​சம் லஞ்​சம் வாங்​கிய நெடுஞ்​சாலைத் துறை உதவி செயற்​பொறி​யாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்​டம், காளை​யார்​கோ​வில் அருகே கிளுவச்சியைச் சேர்ந்​தவர் கந்​த​சாமி. ம

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?