MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது
க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

Admin
Last updated: May 26, 2026 7:56 am
Admin
Share
SHARE

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் 21 வயது இளம்பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாரியப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மலர்ந்த நிலையில், கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கார்த்திக்குடனான உறவை முறித்துக் கொண்டார்.

இளம்பெண் தன்னைத் தவிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், அவரைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால், இளம்பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் 3 பேருடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு இளம்பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை இளம்பெண்ணின் வீட்டின் மீது வீசியுள்ளனர்.

இதில் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து, வீட்டின் போர்டிகோவில் இருந்த செருப்பு ஸ்டாண்டில் விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் எரிந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் தந்தை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கார்த்திக் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CCTVகாதல்காவல்துறைகோவைபெட்ரோல் குண்டுபெண்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீரகம்: செரிமானத்தை மேம்படுத்தி, நச்சுக்களை அகற்றும் அற்புத பொருள்!
Next Article மருத்துவமனைகளுக்கு தடையற்ற மின்சாரம்: சுகாதார அமைச்சர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

க்ரைம்

தோழியின் தந்தைக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: தோழியின் வீட்டிற்கு விளையாடச் சென்ற சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அவரது தந்தைக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு…

1 Min Read
அரசியல்

கோவை: சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்குகள் திறப்பு!

கோவை மாநகரில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களின் பணிகள் விரைவில் நிறைவடையவுள்ளன. மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

1 Min Read
க்ரைம்

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு அருகே வாகன சோதனையின் போது 1 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் இருசக்கர…

1 Min Read
க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?