MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை

அரசியல்

தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை

Admin
Last updated: மே 25, 2026 6:31 காலை
Admin
Share
SHARE

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸின் படுதோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த தோல்விக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல தொகுதிகளில் முறையாக தேர்தல் பணியாற்றாததும், சொந்தக் கட்சி வேட்பாளர்களை வீழ்த்தும் நோக்கில் சிலர் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதும் முக்கிய காரணம் என டெல்லி தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து, தேர்தல் தோல்வி மற்றும் புகார்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் இந்தக் குழுவை அமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 'கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தலைவராக முன்னாள் எம்பி ஜெயக்குமார் செயல்படுவார். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், சி.டி.மெய்யப்பன், கமலிகா காமராஜர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

இக்குழுவினர் விரைவில் பாதிக்கப்பட்ட தொகுதிகளுக்கு நேரில் சென்று வேட்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி, தங்கள் இறுதி அறிக்கையை டெல்லி மேலிடத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் கட்சிப் பணியை சரியாக செய்யாதவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:உண்மை கண்டறியும் குழுகாங்கிரஸ் கட்சிதமிழக காங்கிரஸ்தமிழ்நாடு அரசியல்தேர்தல் தோல்வி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறுநீர் அடக்கி வைத்தால் வரும் நோய்கள்: முக்கிய தகவல்கள்
Next Article பசிக்கும்போது தவிர்க்க வேண்டியவை: மன, கண், வாய் பசி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

அரசியல்

விஜய் அதிரடி திட்டங்கள்: முதல்வர் மீது பேரவை தலைவர் பிரபாகர் நம்பிக்கை!

தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வர் விஜய்யின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

1 Min Read
அரசியல்

பள்ளிகள் அருகே தொடர் சோதனை: போதைக்கு எதிராக ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த பள்ளிகள், கல்லூரிகள் அருகே தொடர் சோதனை நடத்தவும், ரகசிய தகவல் வலைப்பின்னலை உருவாக்கவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

1 Min Read
அரசியல்

சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

புழல் மத்திய சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை கணினிமயமாக்க உத்தரவிட்டார். போதைப்பொருள் தடுப்பு, உள் சந்தை அமைத்தல் குறித்தும் அறிவுறுத்தினார்.

1 Min Read
அரசியல்

ஈரோடு: 50 அடி உயரத்தில் ரயில் இன்ஜின் விழுந்து விபத்து – அதிர்ச்சி தகவல்!

ஈரோடு மின்சார ரயில் பணிமனையில் கிரேன் உடைந்து 80 டன் எடை கொண்ட ரயில் இன்ஜின் 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஊழியர்கள் முறையான…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?